பறந்துபோன பட்டாம்பூச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறந்துபோன பட்டாம்பூச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 13, 2013

உலகப்புகழ் பெற்ற 'பட்டாம்பூச்சி' நாவல் தமிழில் .

              
                 ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் குமுதத்தில்தொடராக வெளிவந்த போது எனக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் அக்கதையை யாருக்கும் தெரியாமல் பாய்க்கு அடியில் மறைத்து வைத்து படித்தது உண்டு.                                                                  
  
கதை நாயகன் செய்யாத குற்றத்திற்காக சிறையில்   இருப்பான். சிறையில் இருந்து தப்பிக்க பல வழிகளில் முயலுவான். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சிகரெட்டை கடத்த கரப்பான் பூச்சியை பயிற்றுவித்திருப்பான் என்று கதை படிக்க படிக்க விறுவிறுப்பாக மயிர்கூச்செறியும் வகையில் நகரும். இது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு.

இப்போது 'பட்டம்பூச்சியை' மீண்டும் நர்மதா பதிப்பகத்தில் பிடித்துள்ளேன். ரா.கி. ரங்கராஜனின் மொழி பெயர்ப்பு ஆளுமையில் உச்சம் தொட்ட நாவல் இது. இக் கதையை மீண்டும் படிப்பது எனது பால்ய காலத்தில் நுழைவது போல் இருக்கிறது.

இக் கதை குமுதத்தில் எந்த வருடம் வெளிவந்தது என்று தெரியவில்லை. தெரிந்தால் எந்த வயதில் இக் கதையை படித்தேன் என்று தெரிந்துவிடும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

பறந்துபோன பட்டாம்பூச்சி


எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மறைவு!

ரா.கி. ரங்கராஜன்


பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முக திறன் கொண்ட ரா.கி. ரங்கராஜன் தனது 85ம் வயதில் சனிக்கிழமை சென்னையில் காலமானார்.

கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்த ரா.கி. தனது 16 வயதினேலேயே எழுதத் தொடங்கிவிட்டார். சக்தி காரியாலயம், காலச்சக்கரம் போன்றவற்றில் தனது இதழியல் பணியை தொடங்கியவர், பிற்பாடு 1947ல் குமுதத்தில் சேர்ந்தார்.  கிட்டத்தட்ட 42 வருடங்கள் குமுதத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.  ரா.கி இருந்த காலம்தான் குமுதத்தின் உச்சம் என்று சொல்லாம்!.

ஹென்றி ஷாரியரின் 'பாப்பிலான்' கதையை குமுதத்தில் 'பட்டாம் பூச்சி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். ஏகோபித்த பாராட்டை பெற்ற அக் கதை மீண்டும் வராதா என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.   ஜெனிபர், கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான் போன்ற  ரா.கி.யின் மொழி பெயர்ப்பு கதைகள் அன்றைய குமுதத்தில் பரபரப்பான பக்கங்கள்.   உலக புகழ் பெற்ற ஆங்கில நாவல்களை தமிழர்களுக்கு தமிழில் படிக்கக் கொடுத்த பெருமை ரா.கி.யைதான் சாரும்.

அவரது எழுத்தில் நான் கடைசியாக படித்தது 'நான் கிருஷ்ண தேவராயன்'. வரலாற்று நாவலான நா.கி.தே. வழக்கமான வரலாற்று நாவல்களின் சாயல்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியிருந்தார்.     கிருஷ்ண தேவராயரைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தியது ரா.கியின் எழுத்துகள்.

எழுத்துகளில் உயிர் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இறப்பு என்பது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!.

                                                                                                                                                                           - தோழன் மபா. 



ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை ரூ.220/-

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...