ஜன்னலுக்கு வெளியே... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜன்னலுக்கு வெளியே... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 14, 2013

வேறுமாதிரியாக இருக்கும் அரசியல்வாதிகள்?!



                 மைச்சருக்கு ஒப்பான பதவி வகிக்கும் அரசியல்வாதி அவர்.  சைரன் வைத்த இன்னோவா அரசுக் காரில்தான் வந்தார். அதற்கு முன்பே என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, "தம்பி நான் கேஷ் எடுத்துட்டு வரேன். நீங்கள் ஆபிஸ் வாசலில் நில்லுங்கள்" என்றார். அவர் சைரன் வைத்த காரில் வந்ததால் கொஞ்சம் பேர் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.


இரண்டு நாளுக்கு முன்பு போட்ட விளம்பரத்திற்கான பணம் அது. வந்தவர் ரூ 15 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டு தம்பி இந்த  15 ஆயிரத்தை வச்சிக்கிங்க மீதி பணம் 10 ஆயிரத்தை இரண்டு நாளைக்குள்ள கொடுத்திடுறேன் என்றார்.  அதை  சொல்லும்போது தயங்கி தயங்கி சொன்னார்.  இவரிடம் பணம் இல்லையா என்று மனதிற்குள் ஒரு ஷாக் அடித்தாலும், அதை முகத்தில் காட்டாமல் இருக்க நிறையவே சிரமப் பட்டேன்.


அவர் எதுவும் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக "பரவாயில்ல சார், நீங்க மீதி அமவுண்ட பொறுமையா கொடுங்க" என்று கூறிவிட்டு அந்த பணத்திற்கு பில் போட்டு அவரது உதவியாளரிடம் கொடுத்தேன்.

பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் பணபலம் மிக்கவர்களாகவும், கோடிகளில் புரள்பவர்களாகவும் அரசு பணத்தில் மஞ்சக் குளிப்பவர்களாகவும்தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், சில இடங்களில் உண்மை வேறுமாதிரியாக இருக்கிறது?!.  அரசியலில் எல்லோருமே சம்பாதிப்பதில்லை.  தன்னிடம் இருந்ததை விட்டவர்கள்தான் அதிகம்.

வியாழன், ஏப்ரல் 25, 2013

இப்ப... ஏமாந்தது யாரு...?



                                   அந்த இனிப்பான (?) நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வாங்க வேண்டி இருந்தது. ஒரு வாரமாக அந் நிறுவனத்தின் அட்மின் மேனேஜரினி 'அந்தா இந்தா' என்று இழுத்தடித்துக் கொண்டு இருந்தார். தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. நேற்று நேராகவே சென்று விட்டேன். ரிசப்ஷனில் விசாரித்த போது, மேடம் இரண்டு நாளா leave என்றார்கள்.

சரி... என்று அவுங்க ஆபீஸ்லேருந்தே அவரை கை பேசியில் தொடர்புக் கொண்டேன். "சார், கடந்த இரண்டு நாளா வாமிட், டிசன்ரி. அதான் உங்க மொபைல கூட பிக்கப் பண்ண முடியவில்லை. இப்பக் கூட நான் ஆபிஸ்லதான் (?) சார் இருக்கேன். எம்டி இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல என்றார்".

எனக்கு திடுக்கென்றது. எப்படி இந்த அம்மனி கூசாமல் பொய் சொல்கிறார் என்று. 'நான் உங்க ஆபிஸ்ல தான் இருக்கேன் மேடம்' என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், அதை சொல்லி ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வெறுமனெ 'ம்' கொட்டினேன்.

எனக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய 'ஏமாறும் கலை' என்ற கதைதான் ஞாபகத்தில் வந்தது. அதில் இப்படித்தான் வங்கியில் பணம் கட்ட (அவ்வப்போது) வரும் பெண்மனி தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது. அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல. அந்த வங்கியின் கேஷியர் அவருக்கு சிறப்பு சலுகைத் தருகிறார். "மேடம்.... நீங்க இனி கீயுவில் நிற்க வேண்டாம். நேரே வந்து எனது கவுண்டரில் கட்டிவிடுங்கள்" என்கிறார்.

அப்படி இருக்க ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியர் கடுப்பாகிறார். " சை...இந்த பொம்மனாட்டி நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " என்று மனதிற்குள் குமுறுகிறார். " நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள் என்கிறார். அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே காட்டிக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு....?

கிட்டத்தட்ட என் மன நிலையும் இப்படிதான் இருந்தது. 'ஏமாறும் கலை' சிறு கதையில் யுவன் சந்திரசேகர் மைனுட்டான அந்த விஷயத்தை மிக அழகாக கையாண்டிருப்பார்.

எனக்கும் அது சரியென்றுதான் பட்டது.

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

இந்த வாரம்...



இந்த வாரம் உலகில் வலம் வந்த சில சம்பவங்கள்.




பன்றி காய்ச்சல்!


உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய், எல்லோர் வாயிலும் அகப்பட்டுப் போனது. (எழுதுவதால் யாருக்கும் தொற்றிவிடது).


என் நண்பன் கேட்டான் "மச்சான், பன்றிக்கு காய்ச்சல் வந்தால், மனுஷனுக்கு ஏன் ஊசி போடுறாங்க..." நல்ல கேள்வி என்று நினைத்துக்கொண்டேன்.

முன்பு வந்த சீசனில் 'சிக்கின்-குனிய' நோய் உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக இந்த போல் வைரஸ் கிருமிகள் முதலில் தோன்றுவது ஆசியக் கண்டத்தில் தான் என்று மேற்கு நாடுகள் பொய்யுரை பரப்பி வரும். ஆனால் இந்த முறை மெக்சிகோ என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். மெக்சிகோ தென் அமெரிக்கவில் உள்ள ஏழை நாடு என்பதால் இருக்குமோ ? (மெக்சிகோ, உலகப் பந்தில் சரியாக இந்தியாவிற்கு கீழே வருகிறது என்கிறார்களே உண்மையா?)




கே பி கைது. ஒரு நாடகம்!
என்னசொல்லி... மலேசிய அரசு இலங்கைக்கு அனுமதி வழங்கி இருக்கும்?

" நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் தமிழர்கள் இங்கேயும் ஆயுதம் தூக்குவார்கள். அது உங்கள் தேசத்தை துண்டாடும். அதனால் புலிகளின் மீதமுள்ள தலைவர் கே பி யை பிடித்துக் குடுத்தால் போதும். மலேசிய தமிழர்களை அடக்க எங்கள் நாடும் உங்களுக்கு உதவும். இது புத்தர் (?) மேல் ஆணை." என்று அவர்களின் காலில் விழுந்து நக்கி இருப்பார்கள். அதனால் தான் மலேஷியாவில் நடந்த கைதை, தாய்லாந்து என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள் சிங்கள இனவாத அரசு.


உலகில் இதுவரை நடந்த எந்த ஒரு சுதந்திரப் போரும், முடிவில் வெற்றிதான் பெற்றுள்ளது. ஏனன்றால், தனது தாய் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களின் ஆத்மா அந்த வெற்றியை பெற்று தரும்.
ஈழம் வெல்லும்.


சிலைகள் திறப்பு... இரு மனங்களின் இணைப்பு...




திருவள்ளுவர் -சர்வைன்கர் சிலை சிலை திறப்பு, நல்ல அரசுகளின் சிறப்பான செயல்பாடுதான் என்று சொல்லவேண்டு. ஏனன்றால், தமிழ் நாட்டிற்கு நீர் தரவேண்டம் என்று அணையில் விழுந்து செத்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த வகையிலாவது தமிழகத்திற்கும், கன்னடதிருகும் எப்போதும் பிரச்சினை இருந்து வரும். அது ! காவிரி ஆகட்டும் ஓகேநக்கல் ஆக்கட்டும்.

எதாவது ஒரு தகராறு என்றால் உடனே தமிழ் சினிமா ஓடும் தியேட்டரை அடித்து உடைப்பது, நகருக்கு வரும் தமிழ் நாட்டு வண்டிகளை அடித்து நொறுக்குவது. என்று அவர்களின் அலப்பறை நம்மால் தாங்க முடியாது.

நான் கூடசிறு வயதில் பெங்களூரு தமிழ் நாட்டின் ஒரு பகுதி என்றுதான் நினைத்து இருந்தேன்(?) அந்தளவிற்கு நம்ம ஆள், அங்கு இருந்து வேர் ஊன்றி உள்ளான்.


எடியுரப்பா தமிழ் நாட்டிற்கு இடையுராக இருப்பார் என்று தான் நினை த்திருப்போம். நல்ல வேலை அவர் முன்பு இருந்தவர்கள் போல் இல்லை என்று தான் சொல்லவேண்டு. எடியுரப்பவின் முயற்சிக்கு கரம் நீட்டிய கலைஞரையும் வாழ்த்த வேண்டும்.


நல்ல முயற்சி என்றும் நன்மை தரும்.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...