வியாழன், டிசம்பர் 23, 2021

இந்து தேசியம் -தொ.பரமசிவன்

சென்னை புத்ததக் காட்சி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதையொட்டி அடுத்த பத்து நாட்களுக்கு (ஜனவரி1 வரை) நீங்கள் படித்த புத்தகங்களை சிறு குறிப்பு கொண்டு வெளியிடுங்கள் என்று 'புத்தகம் பேசுது' மாத இதழ் வாயிலாக பாரதி நாகராசன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருந்தார்கள்.



இன்றைய தேதியில் நமது தமிழ் இளைஞர்கள் அறிவார்ந்த புத்தகங்களை தேடிச்சென்று படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம் தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் எழுதிய 'இந்து தேசியம்'.
நான் இந்துவல்ல நீங்கள்?
சங்கர மடம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,
இந்து தேசியம்,
இதுதான் பார்ப்பனியம்,
புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
இந்திய தேசியமும் திராவிட தேசியமும் : உறவுகளும் முரண்களும் என்று ஐந்துக்கும் மேற்பட்ட குறுநூல்களின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.
இந்து, திராவிடம், நீதிக்கட்சி, வேதம், பார்ப்பனீயம்,சாதியம், மடங்கள், தமிழர் பண்பாடு என்று இன்றைய இளைஞர்கள் விடை தேடித் துடிக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
எளிய நடையும், பொட்டிலடித்தாற் போன்ற ஆதாரங்களும், வரலாற்றுத் தரவுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெளியிட்ட நாள் முதல் பல பதிப்புகளை கண்டு, தமிழர்களிடையே ஏக போக வரவேற்புக் கண்டதே இந் நூலுக்கான வெற்றியாகும்!
பக்கம் 144
விலை ரூ.160

திங்கள், அக்டோபர் 04, 2021

செம்மீன் மலையாள நாவல்


          தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பரிக்குட்டி பெண் குட்டி என்றே நினைத்தேன். பிற்பாடுதான் தெரிந்தது அது ஃபரீக் குட்டி என்று.
மலையாளிகளின் இலக்கிய பிரஸ்தாபத்தில் செம்மீனுக்கு முக்கிய இடமுண்டு. 1956 ல் செம்மீன் நாவல் வெளிவந்த போது, அந்நாட்களில் இந் நாவல் பல பெரிய பாராட்டுகளையும், சில பல கடும் விமர்சனங்களையும் எதிர் கொண்டிருக்கிறது. 
 

சாகித்ய அகாடமி (1959) விருது பெற்ற இந் நாவலை,
தகழி சிவசங்கரப் பிள்ளை 20 நாட்களில் எழுதி முடித்துவிட்டார்?! என்னவோரு அசாத்திய வேகம்? 
 
1956 ல் செம்படவச் சேரிகளின் நிலையையும், அரையர்களின் இனவரைவியலுமாக இக்கதை நகர்கிறது. கட்டிய கணவன் கடல் மீதேறி போகையில், கரையில் இருக்கும் மனைவியின் ஒழுக்கம்தான், கடலாடும் மீனவனை காப்பாற்றுகிறது. கடலில் அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால், அதற்கான முழு பொறுப்பையும் தயவுதாட்சன்யமின்றி பெண்ணின் மீதே சுமத்தி வைக்கிறது இச் சமூகம். 
 
ஒரு ஆணும் பெண்ணும், அங்கே இங்கே பேசிக் கொண்டு நின்றால் போதும்....உடனே கதை கட்டிவிடுகிறார்கள். அதுவும் என்னேரமும் காத்து வீசும் பட்டிணச் சேரியில் கேட்கவா வேண்டும்? அது ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது. அப்படியான ஒரு சுழலில்தான் கறுத்தம்மாவும் முஸ்லிமான பரீக்குட்டியும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு வகையில் கறுத்தம்மாவின் தந்தைக்கு பரீக்குட்டி சின்ன முதலாளி. 
 
'மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து' என்பது போலவே பெண்கள் இச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறாள்.
பெண்ணின் ஒழுக்க நெறியின் ஊடே, இக் கதை பயணிக்கிறது. இந்தக் காலத்தோடு அந்தக் கதையை பொறுத்திப்பார்க்க முடியாது. அது அபத்தம். ஒரு அபப் புனைவாகத்தான் இக் கதை படைக்கப்பட்டிருக்கிறது. சுந்தரராமசாமியின் தேர்ந்த மொழி பெயர்ப்பு நம்மை மலையாள மூல நாவலை வாசிப்பது போன்றே இருக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை.
செம்மீனின் ஏகோபித்த வரவேற்பையொட்டி... அது திரைப்படமாக 1965ல் எடுக்கப்பட்டது. ஒரிஜனல் நாவல் போலவே, படமும் செம ஹிட்! எட்டு லட்சம் முதல் போட்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் 40 லட்சத்தை சம்பாதித்து தந்திருக்கிறது. அந்த காலத்தில் அது ஜாக்பாட்! 
 
மலையாளிகளின் சுக ஜீவிதத்தில், ஒரு தேசிய கீதம் உண்டெங்கில் அது...
'கடலின் அக்கரை போனோரே
காணாப் பொன்னுக்காய்ப் போனோரே....' என்ற செம்மீன் பாடல் தான். இன்றளவும் மலையாள திரைப்பட பாடல்களின் அடையாளமாக, கலாச்சாரமாக இப்பாடலே இருக்கிறது. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர் திரையிசை மேதை சலீல் செளத்ரி அவர்கள்.
 
 
-----
சீர்காழிக்கு அருகில் எனது மாமா (மாமனார் வீடும் கூட) வீட்டிலிருந்து... கூப்பிடும் தூரத்தில் தான் சின்ன கொட்டாய்மேடு கடல் இருக்கிறது. நல்ல வெள்ளை மணல் போர்த்திய கடல். தண்ணீர் அப்படியே ஸ்படிகமாட்டாம் மின்னும். அப்படி ஒரு சுத்தம்.
செம்மீன் வாசித்தப் பிரேமையில் அப்படியே கடற்கரை ஓரம் நடந்தேன். கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோனியில் ஃபரீக் குட்டி போல் படுத்துக் கிடந்தேன். 
 
வானில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருந்தன...நினைத்துப் பார்த்தால் நம்முள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அது சதாசர்வகாலமும் நினைவுகளோடு ஆர்பரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 
 
இப்படியான கடற்கரைகளில்தான் எத்தனை எத்தனை கருத்தம்மாக்களும் ஃபரீக்குட்டிகளும், பழனியும் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களின் துயர் மிகுந்த கதையைதான் இந்தப் பெருங்கடல் மீண்டும் மீண்டும் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
செம்மீன் காலத்தால் அழியாத காவியம்!

திங்கள், ஜூலை 26, 2021

2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பு .



லகமே இந்தக் கரோனா காலத்தில் சுணங்கிக் கிடந்த போதும், சுறுசுறுப்பாக இயங்கி 2000 to 2020 ஆண்டுக்கான, தமிழ் படைப்பாளர்களின் ஆகச் சிறந்த படைப்புகளை தொகுத்து வெளியீட்டு இருக்கிறது கலைஞன் பதிப்பகம்.
முன்னூற்றி சொச்சம் கவிஞர்கள், குறிப்பிடத்தக்க கட்டுரையாளர்கள், சிறந்த சிறுகதைகள் என்று மாபெரும் தொகுப்பினை இரண்டு தொகுதிகளாக வெளியீட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியும் 320 பக்கங்கள்! 
 
தமிழகக் கவிஞர்கள் மட்டுமல்லாமல், இலங்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் என்று சர்வதேச கவிஞர்களின் படைப்புகள் இத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ளது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என்று பெரும் படைப்பாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை அச்சிலேற்றி,பிழைத் திருத்தி, செப்பனிட்டு புத்தகமாகக் கொண்டு வருவதெல்லாம் லேசுப்பட்ட விஷயம் இல்லை. பெரும் நடிக பட்டாளத்தைத் திரட்டி, நீண்ட கால தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் சினிமா எடுப்பது போன்ற விஷயம் இது. அதை மிக அநாயசமாக செய்திருக்கிறது கலைஞன் பதிப்பகம்.
இரண்டு தொகுதிகளைக் கொண்டு வந்ததுமல்லாமல், அவற்றை உரிய படைப்பாளர்களுக்கு, தமது சொந்த செலவில் கூரியர் மூலம் அனுப்பவும் செய்கின்றனர். பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்த கரோனா காலத்தில் இப்படியான முன்னெடுப்பு பாராட்டுக்குரியது!
இத் தொகுப்பின் இரண்டாவது தொகுதியில் எனது 'ஆதி நிலத்து தேவதை' கவிதையும் இடம்பெற்றுள்ளது. இக் கவிதை காலத்தே பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது நிகழ்ந்திருக்கிறது. சர்வதேசிய கவிஞர்களின் கவிதைக்கிடையே எனது கவிதையும் வந்திருக்கிறது, மகிழ்ச்சி!
புதிய முயற்சிகளை மேற் கொள்வதில் கலைஞன் பதிப்பகம் நந்தன் சார் அவர்கள் எப்போதுமே வித்தியாசமானவர். பதிப்புத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுப்பார். மலேஷியா, சிங்கப்பூர் பல்கலைக்கழங்களோடு இணைந்து பல புதிய படைப்புகளைக் வெளியீட்டு இருக்கிறார். மலேயா, சிங்கை படைப்பாளர்களை தமிழில் அறிமுகம் செய்திருக்கிறார்.
மலாய் மற்றும் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து, 'கவிதையாய் விரியும் வாழ்வு' என்ற தொகுப்பினை
2014 ஆம் ஆண்டு வாக்கில் வெளியீட்டு இருக்கிறார் நந்தன் அவர்கள். அதன் தொடர்ச்சியே தற்போது வெளிவந்திருக்கும் இந்த இரண்டு தொகுதிகளும்.
கவிதையாய் விரியும் வாழ்வு தொகுதியில், படைப்பாளர்கள் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றிருந்தது. அதே போன்று இந்தத் தொகுதிகளிலும் படைப்பாளர்களைப் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொறுப்பாசிரியர்: கவிஞர் எஸ், சண்முகம், தொகுப்பாசிரியர்கள்: முனைவர் அபிதா சபாபதி, முனைவர் அரங்க.பாரி, முனைவர் கிருஷ்ணன் மணியம், கவிஞர் தமிழ் மணவாளன், கவிஞர் ஆசு யுகாந்தன் என்று ஒரு பெரிய டீமே இத் தொகுப்பிற்காக உழைத்திருக்கிறார்கள். இவர்களது உழைப்பு வீண் போகாமல், தமிழ் இலக்கிய உலகிற்கு நல் ஆவணமாகக் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துக்கள்
!!
 
 குறிப்பு: முதல் தொகுதியில் படைப்பாளர்களின் பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன் இங்கு பதிவேற்றப்படும் ....
 

இரண்டாம் தொகுதியில் இடம் பெற்ற படைப்பாளர்களின் பெயர்கள்:

 

கவிஞர்கள்:

1. அ. வெண்ணிலா
2. அகச்சேரன்
3. அகராதி
4. அஞ்சலி பொன்னம்மா
5. அம்பிகா குமரன்
6. அமிர்தம் சூர்யா
7. அமீர்ஜான்
8. அய்யப்பமாதவன்
9. அராரதா
10. அன்பாதவன்
11. அன்றிலன்
12. அஸீஸ் எம்பாயிஸ்
13. ஆகாசமுத்து
14. ஆதி பார்த்தீபன்
15. ஆர் கே இராமநாதன்
16. ஆலா
17. ஆனந்தி சுப்பையா
18. இரா மோகன்ராஜன்
19. இரா. கவியரசு
20. இராய செல்லப்பா
21. இளந்தென்றல் திரவியம்
22. இளம்பிறை
23. உமையவன்
24. எம். பாண்டியராஜன்
25. என்.டி. ராஜ்குமார்
26. எஸ். குமாரகிருஷ்ணன்
27. எஸ். திலகவதி
28. எஸ். பி. பாலமுருகன்
29. ஏ. ஏ. பைசல்
30. க. ராஜகுமாரன்
31. கண்ணம்மாள் மனோகரன்
32. கண்மணி ராசா
33. கதிர்காமன்
34. கருணாகரன்
35. கலாநிதி கந்தசாமி வாகீசர்
36. கனகாபாலன்
37. கனிவுமதி
38. காலையூர் நெய்தல்நாடன்
39. குறிஞ்சியூர் செந்தமிழி
40. கே. ஜீ. வீரமணி
41. கோ. நவமணி
42. கோகுலா
43. ச. ராச்
44. சக்திவேல்
45. சசிகலா எத்திராஜ்
46. சத்தியானந்தன்
47. சந்திரா மனோகரன்
48. சப்னாஸ் ஹாசிம்
49. சமரபாகு சீனா உதயகுமார்
50. சரசுவதி காயத்ரி
51. சாகிப்கிரான்
52. சிவராஜ்
53. சீராளன் ஜெயந்தன்
54. சு. சா. அரவிந்தன்
55. சுகதேவ்
56. சுகன் கலாபன்
57. சுபா செந்தில்குமார்
58. சுரேஷ்பாபு ராசேந்திரன்
59. சூரியதாஸ்
60. செ. கார்த்திகா
61. செங்கான் கார்முகில்
62. செஞ்சி தமிழினியன்
63. செந்தி
64. செம்மலர் செல்வன். கே
65. சேலம் ராஜா
66. சொர்ணபாரதி
67. சோலச்சி
68. சோலை மாயவன்
69. டீன் கபூர்
70. த. அரவிந்தன்
71. த. பழமலய்
72. தபு சங்கர்
73. தமிழ் உதயன்
74. தமிழன்பன்
75. தர்மினி (ஃபிரான்ஸ்)
76. திருமதி. இராம.பெருமாள் ஆச்சி
77. தென்றல் சிவக்குமார்
78. தேவசீமா
79. தோழன். ம. பா
80. நர்சிம்
81. நா. கோகிலன்
82. நா. திங்களன்
83. நா.வே. அருள்
84. நான்சிகோமகன்
85. நிறோஷ் ஞானச்செல்வம்
86. நிஷாந்தன்
87. நௌஃபால்
88. நௌபல் (முகம்மது)
89. ப. உ. தென்றல்
90. பச்சியப்பன்
91. பா. கிருஷ்ணன்
92. பா. தேவேந்திர பூபதி
93. பா. ராஜா
94. பாட்டாளி
95. பாபுசசிதரன்
96. பாம்பாட்டிச் சித்தன்
97. பாரிகபிலன்
98. பாலா
99. பாவலர் மலரடியான்
100. பி. கே. சிவகுமார்
101. பிரபுசங்கர். க
102. புத்தொளி ஆறுமுகம்
103. பெரு விஷ்ணுகுமார்
104. பேனா மனோகரன்
105. பொ. திராவிடமணி
106. பொன் குமார்
107. மா. காளிதாஸ்
108. மா. செந்தில்குமார்
109. மாயன்
110. மாரி மகேந்திரன்
111. மாரிமுத்து சிவகுமார்
112. மாலினி மாலா
113. மிஸ்ரா ஜப்பார்
114. மீ. விசுவநாதன்
115. மீன் கொடி
116. மு. குலசேகரன்
117. மு. பாலசுப்ரமணியன்
118. மு. முருகேஷ்
119. முனைவர் ஏ. இராஜலட்சுமி
120. முனைவர் ஜி. சத்திய பாலன்
121. முஷிதா
122. மேகலன்
123. மௌனன் யாத்ரிகா
124. யுகயுகன்
125. ராசி அழகப்பன்
126. ராம் பெரியசாமி
127. ருஸ்னா நவாஸ்
128. லதா நாகராஜன்
129. லலிதானந்த்
130. லாவண்யா சுந்தரராஜன்
131. வசந்ததீபன்
132. வண்ணை வளவன்
133. வானவன்
134. வி. அல்விற்
135. வெ. நிலாக்கதிர்
136. வெற்றிப்பேரொளி
137. வே. நி. சூர்யா
138. வே. முத்துக்குமார்
139. வேதிசா தேவி சுமதி
140. ஜமீல்
141. ஜானகி இராஜா
142. ஜி. சிவக்குமார்
143. ஜீவா
144. ஜெகன் மோகன்
145. ஜெம்சித் ஸமான்
146. ஜே. பிரோஸ்கான்
147. ஸ்டாலின் சரவணன்
148. ஸ்ரீ பிரசாந்தன்
149. ஸ்ரீதர்பாரதி
150. ஸ்ரீரசா
151. ஸ்ரீஷங்கர்
152. ஸ்ருதி ரமணி
153. ஹரணி

கதையாசிரியர்கள்

1. முனைவர் அரங்க. மணிமாறன்
2. நாராயணிகண்ணகி
3. கே. முருகேசன்
4. ஸிந்துஜா
5. கே. எஸ். சுதாகர்
6. கனகா பாலன்
7. வசந்ததீபன்
8. ஷேக் சிந்தா மதார்
9. செல்வராஜ் ஜெகதீசன்
10. துரை. அறிவழகன்
11. மிகையிலான்
12. தனாட் ஜெனெ
13. ருஸ்னா நவாஸ்
14. மலையரசி சீனிவாசன்
15. தமிழ்ச்செல்வி
16. அண்டனூர் சுரா
17. மா. அரங்கநாதன்
18. நிரஜா
19. சுஜாதா
20. வை. கிருஷ்ணன்
21. மணிமாலா மதியழகன்
22. ஆர். ரவிசங்கர்
23. சக்தி அருளானந்தம்
24. மு. கோபி சரபோஜி
25. நாகா செல்வா
26. சோ. சுப்புராஜ்
27. சுதாராஜ்
28. ரா. பிரசன்னா
29. ந. மோகன்ராஜ்
30. கே. நிருபமா
31. ரமேஷ் கல்யாண்
32. ராமு
33. நாகபிரகாஷ்
34. கோ. மிதுராங்கன்
35. பாக்கியம் சங்கர்
36. பி. கே. அருணா

கட்டுரையாசிரியர்கள்

1. சோழ நாகராஜன்
2. மு. முருகேஷ்
3. பானுமதி பாஸ்கோ
4. எம். பாண்டியராஜன்
5. சிந்து பாஸ்கர்
6. சொ. ஞானசம்பந்தன்
7. பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
8. த. சுந்தரராஜ்
9. முனைவர் கிருஷ்ணன் மணியம்
10. சண்முக விமல்குமார்
11. நிதா எழிலரசி
12. ஆர். சிவக்குமார்
13. எம். டி. முத்துக்குமாரசாமி
14. அ. மார்க்ஸ்
15. பா. சகாதேவன்
16. மத்தீன்
17. முனைவர் பொ. திராவிடமணி
18. ரவிசுப்ரமணியன்
19. மணா லக்ஷ்மணன்
20. தமிழச்சி தங்கபாண்டியன்
21. சுகதேவ்
22. கே. வைத்தியநாதன்
23. கே.எஸ். ராதாகிருஷ்ணன்
24. யுகாந்தன்
 
 
 
 

புதன், ஜூலை 21, 2021

சீர்காழி அருகில் சிறு தீவு - கொடியம்பாளையம்

   யிலாடுதுறை மாவட்ட அரசு நிர்வாகம், ஓட்டு பெட்டி முதற்கொண்டு தடுப்பூசி போடுவதுவரை இன்றளவும் நிர்வாக ரீதியாக, மாதானம், புதுப்பட்டினம் வழியாக பழையார் வந்து அங்கிருந்து படகுகளில்தான் பிரயாணம் செய்கிறது. முப்புரமும் கடல் சூழ்ந்து இருக்க...புன்னைவனக் காடுகளின் மத்தியில் இருக்கிறது கொடியம்பாளையம் கிராமம். சிதம்பரத்திலிருந்து மினி பஸ் வருகிறது. பஸ்டாண்ட என்பதற்கு அடையாளமாக இரண்டு டீ கடைகள் இருக்கிறது.
கொடியம்பாளையம் கிராமம்

இங்கு இருக்கும் பாப்பா மெஸ்ஸில், நாம் முன்பே சொல்லி வைத்துவிட்டால், மீன், நண்டு, இறால், கடம்பா என்று கடல் உணவுகளை மண்ணின் மனத்துடன் சுடச்சுட சமைத்துத் தருகிறார்கள். சமீப காலமாக சிதம்பரம் நகர வாசிகள், காரில் இங்கு வந்து கடலில் குளித்து, கடல் உணவுகளை ருசித்து வார விடுமுறையைக் கழிக்கிறார்கள்.
கடற்கரையில் எந்தவித கடைகளும் இல்லை. இரவு நேரங்களில் புன்னைவனக் காடுகளிலிருந்து நரிகள் வெளியில் வந்து கடற்கரையில் நண்டு வேட்டை ஆடுவதைப் பார்க்க முடிகிறது. சுய பாதுகாப்பு அவசியம்.
கொடியம்பாளையம் கிராமத்தில் இருக்கும் டீ கடை 

ஒற்றையடிப்பாதை, சதுப்பு நிலம், புன்னைவனக் காடுகள், அமைதித் தவழும் நீண்ட கடற்கரை என்று இயற்கையை விரும்பும் எவருக்கும் கொடியம்பாளையம், காசு செலவில்லாத மினி மெரினாதான் !

 #கொடியம்பாளையம் 
#mabacliks 
#மயிலாடுதுறைமாவட்டம்

திங்கள், ஏப்ரல் 26, 2021

கரோனா எதிர்ப்பு போரில் குஜராத்தை மிஞ்சும் தமிழகம் !

வர் குஜராத் பெண்மணி. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால் தமிழ் அட்சரம் பிசகாமல் வரும். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது உறவினர்கள் அடையார், புரசைவாக்கம், செளகார்பேட்டை என்று சென்னை முழுவதும் வியாபித்து வாழ்கிறார்கள்.
இதுனால் வரைக்கும் எங்க குஜராத் அப்படி, எங்க குஜராத் இப்படி என்று வம்படியாக கம்பு சுற்றிக் கொண்டு இருந்தார். மோடி, அமித்ஷா வகையராக்களின் வீர தீர பராக்கிரமங்களை வாய் வலிக்க வியாக்கியானம் பாடுவார். அவர் என்று இல்லை, அவரது உறவுகள் முழுவதுமே அப்படிதான். குஜராத்திகளின் பெருமைகளை அவர்கள் பேசும் போது கேட்க வேண்டுமே? காதில் ரத்தம் வந்துவிடும். ரொம்ப உக்கிரம் காட்டுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் வாழும் அவரது உறவினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார், ஸ்டான்லி , ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு நல்ல சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குஜராத் அம்மணி பேஸ்தடித்துக் கிடக்கிறார். குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களில் பலர் கரோனாவால் பீடிக்கப்பட்டு கிடக்கிறார்களாம். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவுடன் அரசுக்கு தெரியப்படுத்தினால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லையாம். மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறதாம். இதனால் பலர் உயிரிழக்க நேர்கிறதாம். என்று சோக கீதம் வாசித்தார்.
'அந்த வகையில் நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைப்பா.... (கவனிக்க...நம்ம தமிழ்நாடு). பாசிட்டிவுன்னு அரசாங்கத்துக்கு தகவல் தெரிந்தவுடன், சுகாதார ஆய்வாளர்கள் வீட்டுக்கு நேரடியாகவே வர்றாங்க. சுவாப் மற்றும் சிடி ஸ்கேன் டெஸ்ட் மூலம் கரோனா தொற்றின் நிலை குறித்து தெரிந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சையா...? இல்லை வீட்டில் தனிமைப்படுத்துதல் போதுமா என்று முடிவெடுத்து நோயாளிகளை காப்பாற்றுகின்றனர்' என்றவர் முத்தாய்ப்பாக 'thank god' என்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் நிலை அறிந்து தன்னை மேம்படுத்திக் கொணடிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. கரோனா நோய்க்கு எதிரான முன் களப்பணி, கரோனா நோய்க்கு பிந்தைய நலவாழ்வு என்று அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கின்றது தமிழகம்.
மருத்துவ துறையில் இப்படி நிலையான வளர்ச்சிக்கு சுயமாய் சிந்தித்த திராவிட ஆட்சியாளர்களே காரணம். இது வட மாநிலங்களில் மிஸ்ஸிங்.
அதனாலேயே உண்மை நிலை உணர்ந்து அந்த குஜராத் பெண்மணி இப்போது கதறுகிறார்.
ஆனால் சில மேதாவிகள், குஜராத் பற்றிய போலி பிம்பங்களை இங்கு பரவவிட்டும், 'தமிழகத்தை திராவிட கட்சிகள் வீணடித்து விட்டன' என்றும் கூக்குரலிட்டு வருகிறார்கள்.
-மபா
No photo description available.

சனி, ஏப்ரல் 17, 2021

சித்திரை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை. விரிவான தகவல்




தமிழ் புத்தாண்டு தை மாதமா சித்திரை மாதமா என்ற கேள்வி தமிழர்களிடையே பல காலமாக இருந்து வருகிறது. உலகின் முது மொழியான தமிழ் மொழியின் ஆண்டுகள் எப்படி சமஸ்கிருதத்தில் இருக்க முடியும் ? என்ற கேள்வியின் முடிவே தை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு என்ற முடிவிற்கு தமிழாய்ந்த அறிஞர்கள் வந்திருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1935 ஆம் ஆண்டு தை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு என்று எடுக்கப்பட்ட முடிவை இன்று வரை அதாவது 2021 ஆம் வரை கூட நடைமுறைப் படுத்த முடியவில்லை என்றால், இங்கு தமிழ் நாட்டில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்று பாருங்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான ஒரு கும்பல் இன்றுவரை சதி செய்கிறது. அதனாலயே சித்தரை ஒன்றே தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடக் கூடிய இழி நிலை இருந்து வருகிறது.

தை ஒன்றே தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு என்று உண்மை தற்போது இணைய வெளியில் உலாவந்துக் கொண்டு இருக்கிறது. அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதை தமிழர்களிடம் பரப்பச் செய்வோம்.

- மபா.


கட்டுரை 1


தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பார்வை !! தை (சுறவம் ) முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921) 02. தேவநேயப் பாவாணர் 03. பெருஞ்சித்திரனார் 04. பேராசிரியர் கா.நமசிவாயர் 05. இ.மு. சுப்பிரமணியனார் 06. மு.வரதராசனார் 07. இறைக்குருவனார் 08. வ. வேம்பையனார் 09. பேராசிரியர் தமிழண்ணல் 10. வெங்காலூர் குணா 11. கதிர். தமிழ்வாணனார் 12. சின்னப்பத்தமிழர் 13. கி.ஆ.பெ. விசுவநாதர் 14. திரு.வி.க 15. பாரதிதாசனார் 16. கா.சுப்பிரமணியனார் 17. ந.மு.வேங்கடசாமியார் 18. சோமசுந்தர் பாரதியார் 19. புலவர் குழுவினர் (1971) மலையகத்தில் 01. கோ.சாரங்கபாணியார் 02. சா.சி. குறிஞ்சிக்குமரனார் 03. அ.பு.திருமாலனார் 04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார் 05. கம்பர் கனிமொழி குப்புசாமி 06. மணி. வெள்ளையனார் 07. திருமாறன் 08. இரெ.சு.முத்தையா 09. இரா. திருமாவளவனார் 10. இர. திருச்செல்வனார் இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி உரையாடி ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்துத் தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள். இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும். 1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய இந்த அறுபதில் எது தமிழ்ச்சொல்? யாராவது சொல்ல முடியுமா? தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையைச் சான்றாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீனக் காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். (1 நாழிகை - 24 நிமிடங்கள் 60 நாழிகை - 1440 நிமிடங்கள் இதனை இன்றைய கிறித்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால் 1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள் 24 மணித்தியாலங்கள் - 1 நாள்) பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 1. இளவேனில் - (தை---மாசி) 2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை) 3. கார் - (வைகாசி - ஆனி) 4. கூதிர் - (ஆடி - ஆவணி) 5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி) 6. பின்பனி (கார்த்திகை - மார்கழி) மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் உயர்மட்டக் கடுமையை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனில் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டு பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனில் காலங்களில்தான் தொடங்குகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனில் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான ஆற்றல்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன் அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில், சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள்!

-------------------------------------------------------------------


கட்டுரை 2
1-சித்திரை புத்தாண்டு முறை கிபி 78க்கு பிறகுதான் சாலிவாகனன் காலத்துக்கு பிறகு மத புராணங்களின் வழி தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது.
2-கிருஷ்ணரும் நாரதரும் 60 ஆண்டுகள் உடலுறவு கொண்டு பெற்றுகொண்ட 60 மகன்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய வரைக்குமான சமஸ்கிருத ஆண்டுகள் என்கிறது அபிதானசிந்தாமணி.
3 - இந்த 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை சூத்திர ஆண்டுகள் என்கிறார்கள். ஆண்டுகளில் கூட சாதி வர்ணப் பிரிவினை.
4 - இப்படிப்பட்ட முட்டாள்தனமான அறிவுக்கு புறம்பான யாரோ தமிழரல்லாதவர் உருவாக்கிய கதைகளைக் கொண்ட சமஸ்கிருத திணிப்பு ஆண்டு கணக்கை மாற்ற தமிழறிஞர்கள் முடிவெடுத்தனர்.
5 - 1935ல் திருவிக, மறைமலைஅடிகள், உவேசா, கா நா சுப்ரமணியபிள்ளை, சோமசுந்தர பாரதியார், கிஆபெ விஸ்வநாதம் முதலான தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி புதிய ஆண்டை உருவாக்க தொடங்கினர்.
6 -தமிழ் மீது பற்றுகொண்ட பெருமக்கள் ஆரியகலப்பையும் சமஸ்கிருத திணிப்பையும் புறந்தள்ளினர். தமிழ் புத்தாண்டுக்கு ஏன் சமஸ்கிருத ஆண்டு பெயர்கள், தமிழ் புத்தாண்டுக்கு ஏன் மத சார்பு கதைகள் என... தமிழர்களுக்கென திருவள்ளூர் ஆண்டுகளை உருவாக்கினர்.
7 - உலகங்கும் ஜனவரியின் வசந்தகால அடிப்படையில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் நமக்கென புத்தாண்டுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும், மாதங்களில் தை மாதத்தில் மட்டுமே 80% கொண்டாட்டங்களே பிரதானமாக இருந்திருக்கிறது. விவசாய குடிகளான நமக்கு அறுவடைக்காலமே புதிய ஆண்டின் துவக்கமாக இருக்க முடியும் என தீர்மானித்து திருவள்ளுவர் ஆண்டு காலண்டரை உருவாக்கினர்.
8 - அறுவடைக்காலமான தை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டு சமஸ்கிருத ஆண்டுகணக்கிலிருந்து 31 வருடங்கள் பின்னோக்கி திருவள்ளுவர் ஆண்டினை உருவாக்கினர். இதில் தை 1ஐ முதல் மாதமாக்கி அதையே தமிழ்புத்தாண்டு என அறிவித்தனர் தமிழ் அறிஞர்கள்.
9 - 1935லேயே இதை அறிவித்திருந்தாலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் 1972ல் கலைஞர் இதனை ஏற்றுக்கொண்டு அரசு பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டார்.
10 - இருப்பினும் பொல்லாத ஆரிய சதி நம்மை விட்டு அகலவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருத நாட்காட்டியின் படி உருவாக்கப்பட்ட சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு வியாழனும் சனி கிரகமும் சூரியனை சுற்ற 60 ஆண்டுகள் ஆகிறது என்றெல்லாம் விஞ்ஞான காரணங்களை புனைந்தன சமஸ்கிருத கூட்டம்.
11 - பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா தமிழர் கூட்டம். 2006ல் முதல்வராக பதவியேற்ற கலைஞர் தை1 தான் இனி தமிழ்புத்தாண்டு என அதிகாரபூர்வமாக அறிவித்து ஆணையிட்டார்
12 - பார்ப்பனர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா... ? பிரிட்டிஷ் காலத்தில் பிராமின் நியூ இயர் என்று அறிவிக்கபட்ட நாள் ஆயிற்றே. கலைஞர் ஆட்சி அகலும் வரை காத்திருந்தனர். ஜெயலலிதா மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்ததும் அம்மையாரிடம் முறையிட்டு மீண்டும் பழையபடி சித்திரை 1 ஐயே புத்தாண்டாக அறிவிக்க செய்தனர்
13 - நம் சங்க இலக்கியங்கள் எங்கும் நிறைந்திருப்பது தை கொண்டாட்டங்கள் மட்டும்தான். தை கொண்டாட்டங்களுக்கு மத சார்பு கிடையாது.தமிழராக அனைவரையும் ஒன்றிணைக்கிற ஒன்றாக அது இருக்கிறது. ஆனால் சித்திரை புத்தாண்டு மத சார்பு கொண்டது. அது இந்துக்களுக்கு மட்டுமானது என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை 1 ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது அல்ல. தை 1தான் அனைவருக்குமான புத்தாண்டு.
14 - அதனால்தான் நம் கவி பாரதிதாசன் பாடினான்...
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
15 - ஆரியர்கள் திணித்த சித்திரை திருநாள் நம்முடைய புத்தாண்டு அல்ல... தை 1 தான் தமிழர்களாகிய நாம் நமக்காக உருவாக்கிய புத்தாண்டு. அதை கொண்டாடுதல்தான் நமக்கு பெருமையே தவிர இது அல்ல.
இறுதியாக கொண்டாட்டத்தில் அரசியல் பார்க்கவேண்டுமா என்று கேட்கலாம். அரசியல் பார்க்காமல் போனதால்தான் சமஸ்கிருத புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என நமக்கே விற்றிருக்கிறது இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது பார்ப்பன கும்பல்!

-------------------------------------------------------




கட்டுரை 3

தமிழ் புத்தாண்டு எப்போது: அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇 ஆங்கிலேயர்களுக்கு... 1. சனவரி 2. பிப்ரவரி 3 . மார்ச் 4. ஏப்ரல் 5. மே 6. சூன் 7. சூலை 8. ஆகத்து 9. செப்டம்பர் 10. அக்டோபர் 11. நவம்பர் 12. திசம்பர் வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு... 1. சித்திரை 2. வைகாசி 3. ஆனி 4. ஆடி 5. ஆவணி 6. புரட்டா…
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 தமிழர்களுக்கு... 

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு !


நண்பர்களே.... தை ஒன்றே தமிழ் புத்தண்டு தொடர்பான விளக்கக் கட்டுரை இருந்தால் பதிவிடவும்.





வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...