1984 ல் பொற்கோவிலில் நுழைந்த இந்தியப் படை 'ஆப்பரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதால், சினம் கொண்ட சீக்கிய அமைப்புகள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.

இந்திய முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த பீந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொலை சதியில் ஈடுபட்ட பாதுகாவலர் சேகர் சிங் மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவரும் விசாரனைக்குப் பிறகு தூக்கில் போடப்பட்டார்.
இந்த 3 பேரையும் நியூசிலாந்து நாட்டில் மனுகாவ் என்ற இடத்தில் வசிக்கும் சீக்கியர்கள் இந்திராவை கொன்றவர்களை தியாகிகளாக சித்தரித்து கொளரவித்தனர். அங்கு உள்ள சீக்கியர் கோவிலில் அவர்கள் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.
இந்த சம்பவம் அங்கு உள்ள மற்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆக்லாந்தில் உள்ள சீக்கியர் கோவில் நிர்வாகிகள், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் இன்னுயிரை விட்டுள்ளனர். அவர்களை தியாகிகளாக நினவு கூர்ந்து உள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.
இலங்கையில் இந்திய அமைதிப் படை, தமிழனை கொன்று தமிழச்சியை கர்ப்பழித்து ஆடிய ருத்ரதாண்டவம் நாம் அறியாததல்ல. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் மருந்துக்குக் கூட தமிழன் இல்லை. அதுதான் உண்மையும் கூட... அப்படி ஒரு தமிழன அழிப்புப் போரை இலங்கையில் நடத்தியது இந்திய அமைதிப் படை. அதன் மறு வினைதான் 'ராஜீவ் காந்தி படுகொலை'.

இந்திராவை கொன்றவர்கள் தியாகிகள் என்றால், ராஜீவை கொன்றவர்களும் தியாகிகள்தானே?
ராஜீவ் கொலை தொடர்பான நூல்:
ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது யார்?
-இ.அன்னபாண்டியன்
தமிழம்மா பதிப்பகம்
59, வினாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை -106