தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்கள் படிக்க வேண்டிய புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 04, 2025

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !



ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன்று சென்னையில்  நடைபெற்றது. நிகழ்வுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.  விழா சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்த ஜோய் ஆலுக்காஸின் 'ஸ்ப்ரெடிங் ஜோய்' ( Spreading Joy)  தமிழ் பதிப்பை "தங்க மகன் ஜோய்" என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.

விழாவில் பெருந்திரளான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கேரளத்தில் பெரும் பணக்கார குடும்பத்தில்  பிறந்த ஜோயை குடும்பத்தினர் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  15 குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் இவர் 11 ஆவது குழந்தை.  தனக்கான தனிமையை உணர்ந்த ஜோய் தனது பால்யத்தில்  முழு கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தினார். அவரது தீவிரமான வியாபார நுணுக்கம் உலக அளவில் தங்க நகை விற்பனையில் அவருக்கு பேரும் புகழையும் வாங்கித் தந்திருக்கிறது.
 
"கேரளம் தாண்டி எனது முதல் கடையை சென்னையில்தான்  தொடங்கினேன். அதனால் சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான நகரம்" என்றார் ஜோய் ஆலுக்காஸ்  தனது ஏற்புரையில்.

சென்னை தி நகரில்  இருக்கும்  பிரசாந்த கோல்டு டவரில்  இயங்கும் ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரிதான் இந்தியாவின் பெரிய நகைக் கடை  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பார்க்க  தங்க நகைக்கென பிரத்யேக மால் போலவே இருக்கிறது பிரசாந்த் கோல்டு டவர்!
**

விழா முடிந்ததும், விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல ஒரு அட்டை தந்தார்கள். அதில் க்யூ ஆர் கோடு இருந்தது. அந்த க்யூ ஆர் கோர்டை நமது மொபைலில் ஸ்கேன் செய்ததும்... நம்மை ஒரு   தற்படம் (செல்ஃபி) எடுக்க சொல்கிறது,   இல்லை மொபைலிலிருந்தும் நமது புகைப்படத்தை பதிவேற்றமும் செய்யலாம்.

பதிவேற்றம் முடிந்ததும், நமது புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன்  முக அடையாளம் (Face    Recognitions) தரவுகளை  வைத்து,  நாம்  நிகழ்வில் எங்கெங்கு இருந்தோமோ அந்தப் புகைப்படங்களை  தேடி எடுத்து,  சடுதியில் நமது வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பிவிடுகிறது.  



புகைப்படங்களை பார்க்கவே பிரமிப்பாக, ஆச்சரியமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு எந்தளவிற்கு நமது வாழ்க்கையில் ஊடுறுவி இருக்கிறது பாருங்கள் ?!!!

பி.கு: நல்ல வேளையாக கையில் கிளாசு இருக்கும் புகைப்படத்தை அனுப்பவில்லை  என்று நினைத்துக் கொண்டேன். விழாவில் காக்டெயில் இருந்தது.😍 இனிவரும் காலங்களில் இந்த AI என்னென்ன ரகளை செய்யப் போகிறதோ....??!!!

#AI
#joyallukas

சனி, டிசம்பர் 26, 2020

தொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை !



தொ.பரமசிவன், நம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத் தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு,சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டிய அவசியத்தை முன் வைத்தவர். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எளிய மொழியில் புரியவைத்தவர்.

அவரது '#அறியப்படாததமிழகம்' மற்றும் #இந்துதேசியம்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ற முக்கியமான நூலாக பார்க்கிறேன்.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணத்தை, அறியப்படாத தமிழகம் மூலம் சுட்டிக் காட்டினார் என்றால்.... இந்து மதம் வாயிலாக தமிழர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்க அத்துமீறல்களுக்கு இந்து தேசியம் என்ற நூலின் வாயிலாக எதிர்க்குரல் எழுப்பினார்.
அவரது நான் இந்துவல்ல . நீங்கள்...? என்ற புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும். (இந்து தேசியம் என்ற புத்தகத்தில் இக் கட்டுரை இருக்கிறது)

இந்து மாயையில் பிதற்றிக் கொண்டு இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவடைவார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழர்களுக்கானது. அவர்களது சமூக விடுதலைக்கானது. அவரது திடீர் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாயக்கடமை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...