ஞாயிறு, ஜனவரி 10, 2016

தமிழில் 'இனிஷியல்' ஆசிரியர்களுக்கு உத்திரவு!.



 

   சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்திருக்கிறது தமிழக பள்ளி கல்வித் துறை. இதுகாறும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடியிருக்கிறது. தமிழில் நமது பெயரை எழுதும் போது, நமது இனிஷியலை ஆங்கிலத்தில் எழுதுவோம் இத் தவறு பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை தொடங்கி வைத்தவர்கள் பள்ளிகல்வி தொடக்க  ஆசிரியர்கள்தான். அவர்கள் அன்று செய்த தவறு இன்றும் பல தலைமுறை தாண்டி, தவறு என்று தெரியாமலேயே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழ ஆர்வலர்கள் இது தொடர்பாக பல முறை குரல் கொடுத்தும் தற்போதுதான் தமிழக கல்வி துறை தனது தவறை சரி செய்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாணைகள், உத்திரவுகள் அனைத்தும் தமிழிலேயே வெளியிட வேண்டும் என, தமிழக அரசு  உத்திரவிட்டது. அதேபோல், கல்வி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தமிழில் கையெழுத்து போட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகல்வித்  துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால் தமிழில் பெயரை எழுதும் போது, ஆங்கிலத்தில் தங்களது இன்னிஷியலை எழுதுகின்றனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த குணமால் என்பவர் பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம் அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும் அதையும் தமிழில் எழுதவும் உத்திரவிட்டுள்ளது.  இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். 

இனி இத் தவறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!. 

இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை 07/01.2013 ல் தினமணியில் வெளிவந்துள்ளது. 

4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பயனுள்ள உத்தரவு ஐயா
நன்றி

www.eraaedwin.com சொன்னது…

மிக நல்ல செய்தி தோழர்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.

நன்றி அய்யா!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@இரா எட்வின்.

நன்றி தோழர்!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...