செவ்வாய், டிசம்பர் 23, 2008

சு கியின் அபா...

ஒரு குட்டி சிறுவன் திருவிழாவில் நுழைந்தால் எப்படி வேடிக்கை பார்பானோ அப்படி இருக்கிறது மன நிலை . புதிய புதிய பதிவுகள், வித்தியாசமான சிந்தனைகள், இளம் படைபாளிகளின் ஜனரஞ்சகமான படைப்புகள் என்று ப்லோக் தோறும் திருவிழா கொண்டாட்டம் தான். அதுவும் சில பதிவுகளை பார்க்கும்போது தான் தெரிகிறது, நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டிவுள்ளது என்று.


"நமக்கோ மாச மாசம் புள்ள பெக்கிற வேல , அதாங்க மார்க்கெட்டிங் ஜாப். நீங்க என்னதான் ஒரு மாசம் ஒரு கோடி ருபாய் குடுத்தாலும், அது அந்த மாதத் தோடயே முடிந்து விடும். பிறகு மறுபடியும் ஓட வேண்டும். இப்படித்தான் நம்ம வாழ்க்கை. இதில் ப்லோக்கை பராமரிப்பென்பது சிறிது கடினமாக உள்ளது. அதனாலேயே ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் நிறைய இடைவெளி." நிச்சயம் தொடர்ந்து கிறுக்கிதான் ஆகா வேண்டும்.


நான் அதிசயத்து பார்ப்பது நண்பர் சுரேஷ் கண்ணனின் "பிட்சை பாத்திரம் " ப்லோகை தான். நேர்த்தியான எழுத்தாற்றல் மூலம் தனது ப்லோகை மிக அற்புதமா செதுக்கி வருகிறார். அவரது எழுத்துகள் நவீன எழுத்துலகின் முக்கிய அடையாளமாக மாறிவருகிறது. அந்த சரளமான வாக்கிய நடை அவரை பத்திரிகை உலகிற்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். இனி அதை அவரே நினைத்தாலும் குடத்தில் இட முடியாது. சுரேஷ் கண்ணனிடம் இருப்பது பிட்சை பாத்திரம் அல்ல, அது அட்சய பாத்திரம்!.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...