வியாழன், பிப்ரவரி 18, 2010

ரூபாய் நோட்டில் கொக்கரிக்கும் ராஜபக்சே!

தமிழர்களின் தாய் நிலத்தைப் பறித்து, உறவுகளை கொன்றொழித்து, குருதி கொப்பளிக்க கொடுங்கோல் ஆட்சி செய்யும் ராஜபக்சே, தனது உருவப் படத்தை இலங்கை ரூபாய் நோட்டில் வெளியீட்டுள்ளான்.

புலிகளுக்கெதிரான முப்பது வருடங்களுக்கு மேலானப் போரில் தற்போதுதான் சிங்கள ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அதுவும்
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் நடைப்பெற்ற போர் என்பதால், சிங்கள ராணுவத்திற்கு இந்த தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை கொண்டாட ராஜபக்சேவின் படத்தை 1000 ரூபாய் நோட்டில் வெளியிட்டுள்ளது 'இலங்கை மத்திய வங்கி'.





புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த தற்காலிக வெற்றியை கொண்டாடும் ராஜபக்சே.


முன் பக்கத்தில் இரு கைகளையும் உயர்த்தியப் படி ராஜபக்சே, அருகில் இலங்கையின் ஒருங்கிணைந்த வரைபடம், அதில் நடுவில் ஒரு கலசமும் நெற்கதிரும் உள்ளன.

ரூபாய் நோட்டின் அடுத்தப் பக்கத்தில் சிங்கள கொடியை ஏந்தியப் படி ராணுவ வீரர்கள், பின்னணியில் கப்பல் மற்றும் விமானப் படைகளின் அணிவகுப்பு என்று ராஜபக்சேவின் விளம்பர சுவரொட்டியைப் போன்று உள்ளது 1000 ரூபாய் நோட்டு.

தமிழர்களுக்கெதிராக நடைப் பெற்ற போரை முன்னின்று நடத்திய இருவரில் ஒருவன் (பொன்சேகா) சிறையில் உள்ளான். இன்னோருவன் (ராஜபக்சே) வெளியில் உள்ளான். இருவருக்குமே இயற்கை மரணம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

எந்த ஒரு விடுதலைப் போரும் இறுதி வெற்றி வரும் வரை போராட்டத்தை நிறுத்தியதில்லை. உலகில் நடைப்பெற்ற பெரும்பாலான விடுதலைப் போராட்டங்களுக்கு தமதமாகத்தான் நீதி கிடைத்துள்ளது. தமிழன விடுதலைப் போரும் அப்படித்தான். இந்த தோல்வியும் தற்காலிகமானதுதான்.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சுதந்திரமான 'தமிழ் ஈழம்' பிறக்கும் என்பது உறுதி. அதுவரை தமிழ் ஈழ சுந்திரப் போராட்டம் 'நீறுபூத்த நெறுப்பாய்' கணன்றுக் கொண்டு இருக்கட்டும்'

வெற்றி நமதே...

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...