வியாழன், ஏப்ரல் 25, 2013

இப்ப... ஏமாந்தது யாரு...?



                                   அந்த இனிப்பான (?) நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வாங்க வேண்டி இருந்தது. ஒரு வாரமாக அந் நிறுவனத்தின் அட்மின் மேனேஜரினி 'அந்தா இந்தா' என்று இழுத்தடித்துக் கொண்டு இருந்தார். தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. நேற்று நேராகவே சென்று விட்டேன். ரிசப்ஷனில் விசாரித்த போது, மேடம் இரண்டு நாளா leave என்றார்கள்.

சரி... என்று அவுங்க ஆபீஸ்லேருந்தே அவரை கை பேசியில் தொடர்புக் கொண்டேன். "சார், கடந்த இரண்டு நாளா வாமிட், டிசன்ரி. அதான் உங்க மொபைல கூட பிக்கப் பண்ண முடியவில்லை. இப்பக் கூட நான் ஆபிஸ்லதான் (?) சார் இருக்கேன். எம்டி இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல என்றார்".

எனக்கு திடுக்கென்றது. எப்படி இந்த அம்மனி கூசாமல் பொய் சொல்கிறார் என்று. 'நான் உங்க ஆபிஸ்ல தான் இருக்கேன் மேடம்' என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், அதை சொல்லி ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வெறுமனெ 'ம்' கொட்டினேன்.

எனக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய 'ஏமாறும் கலை' என்ற கதைதான் ஞாபகத்தில் வந்தது. அதில் இப்படித்தான் வங்கியில் பணம் கட்ட (அவ்வப்போது) வரும் பெண்மனி தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது. அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல. அந்த வங்கியின் கேஷியர் அவருக்கு சிறப்பு சலுகைத் தருகிறார். "மேடம்.... நீங்க இனி கீயுவில் நிற்க வேண்டாம். நேரே வந்து எனது கவுண்டரில் கட்டிவிடுங்கள்" என்கிறார்.

அப்படி இருக்க ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியர் கடுப்பாகிறார். " சை...இந்த பொம்மனாட்டி நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " என்று மனதிற்குள் குமுறுகிறார். " நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள் என்கிறார். அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே காட்டிக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு....?

கிட்டத்தட்ட என் மன நிலையும் இப்படிதான் இருந்தது. 'ஏமாறும் கலை' சிறு கதையில் யுவன் சந்திரசேகர் மைனுட்டான அந்த விஷயத்தை மிக அழகாக கையாண்டிருப்பார்.

எனக்கும் அது சரியென்றுதான் பட்டது.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...