திங்கள், ஜூன் 03, 2013

தமிழ்க் கிழவன்






எம்  நாவில் நடமாடும்
'தமிழ்' மூன்றெழுத்து !

தமிழேந்தி வாழ என்னுள் ஓடும்
'உயிர்' மூன்றெழுத்து!

என்றும் செய்து முடிக்க
காத்திருக்கும்  'கடமை' மூன்றெழுத்து !

தேர்தலில் நீ கண்டதெல்லாம்
'வெற்றி'  என்ற மூன்றெழுத்து!

தமிழ் நாடு கண்ட
எங்கள் 'அண்ணா' மூன்றெழுத்து!

திராவிடம் போற்றும்
'திமுக'   மூன்றெழுத்து!

தமிழை ஆட்கொண்டு -நீ
உதித்த  நாளும் 'மூன்(று)'றெழுத்து!

திருக்குவளையில் பூத்த
தமிழ்க்கிழவனே - நீ வாழ
தமிழும் வாழும்.  

வாழ்க  நின் பல்லாண்டு!

 -தோழன் மபா.





கருத்துகள் இல்லை:

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...