சனி, மே 09, 2015

ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி!.



இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவு மையம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில்  அண்மையில் நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஜெயகாந்தன் கம்யூனிச மேடைகளில் களமாடிய பொழுதுகளை மிக அழகாக, மிக சொற்பமான புகைப்படங்களைக் கொண்டு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளராகவே மட்டும் அறியப்பட்ட நமக்கு, அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார். அதுவும் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அது ஜெயகாந்தன் தனா? என்ற பிரமிப்பும் நமக்குள் ஓடுகிறது. 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான முன்னெடுப்புகளில் சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அவரது படங்களில் காண முடிந்தது சிறப்பு!.

ஜெயகாந்தனின் 50 ஆண்டுகளான நண்பரான இசைஞானி இளையராஜாவும், ஜெயகாந்தனை நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார், அதையும் இப்படி கண்காட்சிப்  படுத்தினால், வாசகனும் ரசிகனும் ஒரு சேர மகிழ்வான், 

 எனது மொபைல் காமிராவால் எடுக்கப்பட்டது,  அந்தளவிற்கு துல்லியமாக இருக்காது. பொறுத்தருள்க!.







போராட்ட களத்தில்


கண்ணதாசன் பக்கத்தில் அது ஜெயகாந்தன் தானே ...?!



10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்கள் நல்லா இருக்குங்க...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அரிய புகைப் படங்களின் தொகுப்பு கண்டு மகிழ்ந்தேன் ஐயா
மொபைலில் எடுத்தாலும் படங்கள் அருமை நன்றி ஐயா

KILLERGEE Devakottai சொன்னது…


அறிய புகைப்படங்களை காணத்தந்தமைக்கு நன்றி நண்பரே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காண்பதற்கரிய புகைப்படங்கள்!

manjoorraja சொன்னது…

அரிய புகைப்படங்களை வெளியிட்டதற்கு நன்றி.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…




நன்றி தனபாலன்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி அய்யா!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி கில்லர்ஜி!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி நிஜாம்!
நன்றி நிஜாம்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி manjoorraja!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...