சனி, டிசம்பர் 26, 2020

தொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை !



தொ.பரமசிவன், நம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத் தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு,சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டிய அவசியத்தை முன் வைத்தவர். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எளிய மொழியில் புரியவைத்தவர்.

அவரது '#அறியப்படாததமிழகம்' மற்றும் #இந்துதேசியம்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ற முக்கியமான நூலாக பார்க்கிறேன்.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணத்தை, அறியப்படாத தமிழகம் மூலம் சுட்டிக் காட்டினார் என்றால்.... இந்து மதம் வாயிலாக தமிழர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்க அத்துமீறல்களுக்கு இந்து தேசியம் என்ற நூலின் வாயிலாக எதிர்க்குரல் எழுப்பினார்.
அவரது நான் இந்துவல்ல . நீங்கள்...? என்ற புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும். (இந்து தேசியம் என்ற புத்தகத்தில் இக் கட்டுரை இருக்கிறது)

இந்து மாயையில் பிதற்றிக் கொண்டு இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவடைவார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழர்களுக்கானது. அவர்களது சமூக விடுதலைக்கானது. அவரது திடீர் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாயக்கடமை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...