சனி, ஏப்ரல் 17, 2021

சித்திரை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை. விரிவான தகவல்




தமிழ் புத்தாண்டு தை மாதமா சித்திரை மாதமா என்ற கேள்வி தமிழர்களிடையே பல காலமாக இருந்து வருகிறது. உலகின் முது மொழியான தமிழ் மொழியின் ஆண்டுகள் எப்படி சமஸ்கிருதத்தில் இருக்க முடியும் ? என்ற கேள்வியின் முடிவே தை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு என்ற முடிவிற்கு தமிழாய்ந்த அறிஞர்கள் வந்திருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1935 ஆம் ஆண்டு தை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு என்று எடுக்கப்பட்ட முடிவை இன்று வரை அதாவது 2021 ஆம் வரை கூட நடைமுறைப் படுத்த முடியவில்லை என்றால், இங்கு தமிழ் நாட்டில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்று பாருங்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான ஒரு கும்பல் இன்றுவரை சதி செய்கிறது. அதனாலயே சித்தரை ஒன்றே தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடக் கூடிய இழி நிலை இருந்து வருகிறது.

தை ஒன்றே தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு என்று உண்மை தற்போது இணைய வெளியில் உலாவந்துக் கொண்டு இருக்கிறது. அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதை தமிழர்களிடம் பரப்பச் செய்வோம்.

- மபா.


கட்டுரை 1


தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பார்வை !! தை (சுறவம் ) முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921) 02. தேவநேயப் பாவாணர் 03. பெருஞ்சித்திரனார் 04. பேராசிரியர் கா.நமசிவாயர் 05. இ.மு. சுப்பிரமணியனார் 06. மு.வரதராசனார் 07. இறைக்குருவனார் 08. வ. வேம்பையனார் 09. பேராசிரியர் தமிழண்ணல் 10. வெங்காலூர் குணா 11. கதிர். தமிழ்வாணனார் 12. சின்னப்பத்தமிழர் 13. கி.ஆ.பெ. விசுவநாதர் 14. திரு.வி.க 15. பாரதிதாசனார் 16. கா.சுப்பிரமணியனார் 17. ந.மு.வேங்கடசாமியார் 18. சோமசுந்தர் பாரதியார் 19. புலவர் குழுவினர் (1971) மலையகத்தில் 01. கோ.சாரங்கபாணியார் 02. சா.சி. குறிஞ்சிக்குமரனார் 03. அ.பு.திருமாலனார் 04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார் 05. கம்பர் கனிமொழி குப்புசாமி 06. மணி. வெள்ளையனார் 07. திருமாறன் 08. இரெ.சு.முத்தையா 09. இரா. திருமாவளவனார் 10. இர. திருச்செல்வனார் இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி உரையாடி ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்துத் தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள். இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும். 1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய இந்த அறுபதில் எது தமிழ்ச்சொல்? யாராவது சொல்ல முடியுமா? தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையைச் சான்றாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீனக் காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். (1 நாழிகை - 24 நிமிடங்கள் 60 நாழிகை - 1440 நிமிடங்கள் இதனை இன்றைய கிறித்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால் 1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள் 24 மணித்தியாலங்கள் - 1 நாள்) பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 1. இளவேனில் - (தை---மாசி) 2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை) 3. கார் - (வைகாசி - ஆனி) 4. கூதிர் - (ஆடி - ஆவணி) 5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி) 6. பின்பனி (கார்த்திகை - மார்கழி) மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் உயர்மட்டக் கடுமையை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனில் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டு பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனில் காலங்களில்தான் தொடங்குகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனில் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான ஆற்றல்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன் அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில், சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள்!

-------------------------------------------------------------------


கட்டுரை 2
1-சித்திரை புத்தாண்டு முறை கிபி 78க்கு பிறகுதான் சாலிவாகனன் காலத்துக்கு பிறகு மத புராணங்களின் வழி தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது.
2-கிருஷ்ணரும் நாரதரும் 60 ஆண்டுகள் உடலுறவு கொண்டு பெற்றுகொண்ட 60 மகன்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய வரைக்குமான சமஸ்கிருத ஆண்டுகள் என்கிறது அபிதானசிந்தாமணி.
3 - இந்த 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை சூத்திர ஆண்டுகள் என்கிறார்கள். ஆண்டுகளில் கூட சாதி வர்ணப் பிரிவினை.
4 - இப்படிப்பட்ட முட்டாள்தனமான அறிவுக்கு புறம்பான யாரோ தமிழரல்லாதவர் உருவாக்கிய கதைகளைக் கொண்ட சமஸ்கிருத திணிப்பு ஆண்டு கணக்கை மாற்ற தமிழறிஞர்கள் முடிவெடுத்தனர்.
5 - 1935ல் திருவிக, மறைமலைஅடிகள், உவேசா, கா நா சுப்ரமணியபிள்ளை, சோமசுந்தர பாரதியார், கிஆபெ விஸ்வநாதம் முதலான தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி புதிய ஆண்டை உருவாக்க தொடங்கினர்.
6 -தமிழ் மீது பற்றுகொண்ட பெருமக்கள் ஆரியகலப்பையும் சமஸ்கிருத திணிப்பையும் புறந்தள்ளினர். தமிழ் புத்தாண்டுக்கு ஏன் சமஸ்கிருத ஆண்டு பெயர்கள், தமிழ் புத்தாண்டுக்கு ஏன் மத சார்பு கதைகள் என... தமிழர்களுக்கென திருவள்ளூர் ஆண்டுகளை உருவாக்கினர்.
7 - உலகங்கும் ஜனவரியின் வசந்தகால அடிப்படையில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் நமக்கென புத்தாண்டுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும், மாதங்களில் தை மாதத்தில் மட்டுமே 80% கொண்டாட்டங்களே பிரதானமாக இருந்திருக்கிறது. விவசாய குடிகளான நமக்கு அறுவடைக்காலமே புதிய ஆண்டின் துவக்கமாக இருக்க முடியும் என தீர்மானித்து திருவள்ளுவர் ஆண்டு காலண்டரை உருவாக்கினர்.
8 - அறுவடைக்காலமான தை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டு சமஸ்கிருத ஆண்டுகணக்கிலிருந்து 31 வருடங்கள் பின்னோக்கி திருவள்ளுவர் ஆண்டினை உருவாக்கினர். இதில் தை 1ஐ முதல் மாதமாக்கி அதையே தமிழ்புத்தாண்டு என அறிவித்தனர் தமிழ் அறிஞர்கள்.
9 - 1935லேயே இதை அறிவித்திருந்தாலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் 1972ல் கலைஞர் இதனை ஏற்றுக்கொண்டு அரசு பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டார்.
10 - இருப்பினும் பொல்லாத ஆரிய சதி நம்மை விட்டு அகலவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருத நாட்காட்டியின் படி உருவாக்கப்பட்ட சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு வியாழனும் சனி கிரகமும் சூரியனை சுற்ற 60 ஆண்டுகள் ஆகிறது என்றெல்லாம் விஞ்ஞான காரணங்களை புனைந்தன சமஸ்கிருத கூட்டம்.
11 - பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா தமிழர் கூட்டம். 2006ல் முதல்வராக பதவியேற்ற கலைஞர் தை1 தான் இனி தமிழ்புத்தாண்டு என அதிகாரபூர்வமாக அறிவித்து ஆணையிட்டார்
12 - பார்ப்பனர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா... ? பிரிட்டிஷ் காலத்தில் பிராமின் நியூ இயர் என்று அறிவிக்கபட்ட நாள் ஆயிற்றே. கலைஞர் ஆட்சி அகலும் வரை காத்திருந்தனர். ஜெயலலிதா மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்ததும் அம்மையாரிடம் முறையிட்டு மீண்டும் பழையபடி சித்திரை 1 ஐயே புத்தாண்டாக அறிவிக்க செய்தனர்
13 - நம் சங்க இலக்கியங்கள் எங்கும் நிறைந்திருப்பது தை கொண்டாட்டங்கள் மட்டும்தான். தை கொண்டாட்டங்களுக்கு மத சார்பு கிடையாது.தமிழராக அனைவரையும் ஒன்றிணைக்கிற ஒன்றாக அது இருக்கிறது. ஆனால் சித்திரை புத்தாண்டு மத சார்பு கொண்டது. அது இந்துக்களுக்கு மட்டுமானது என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை 1 ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது அல்ல. தை 1தான் அனைவருக்குமான புத்தாண்டு.
14 - அதனால்தான் நம் கவி பாரதிதாசன் பாடினான்...
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
15 - ஆரியர்கள் திணித்த சித்திரை திருநாள் நம்முடைய புத்தாண்டு அல்ல... தை 1 தான் தமிழர்களாகிய நாம் நமக்காக உருவாக்கிய புத்தாண்டு. அதை கொண்டாடுதல்தான் நமக்கு பெருமையே தவிர இது அல்ல.
இறுதியாக கொண்டாட்டத்தில் அரசியல் பார்க்கவேண்டுமா என்று கேட்கலாம். அரசியல் பார்க்காமல் போனதால்தான் சமஸ்கிருத புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என நமக்கே விற்றிருக்கிறது இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது பார்ப்பன கும்பல்!

-------------------------------------------------------




கட்டுரை 3

தமிழ் புத்தாண்டு எப்போது: அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇 ஆங்கிலேயர்களுக்கு... 1. சனவரி 2. பிப்ரவரி 3 . மார்ச் 4. ஏப்ரல் 5. மே 6. சூன் 7. சூலை 8. ஆகத்து 9. செப்டம்பர் 10. அக்டோபர் 11. நவம்பர் 12. திசம்பர் வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு... 1. சித்திரை 2. வைகாசி 3. ஆனி 4. ஆடி 5. ஆவணி 6. புரட்டா…
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 தமிழர்களுக்கு... 

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு !


நண்பர்களே.... தை ஒன்றே தமிழ் புத்தண்டு தொடர்பான விளக்கக் கட்டுரை இருந்தால் பதிவிடவும்.





1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான கட்டுரை ஐயா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...