ஞாயிறு, ஜனவரி 25, 2009

என் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...

வேலை நிமித்தமாக நான்கு நாட்கள் வேலூருக்கு செல்ல நேர்ந்தது. நானும் எங்களது பொது மேலாளரும்வர்த்தகம் ) மகிழுந்தில் சென்றோம். ஆச்சியர் மாளிகைக்கு அருகில் உள்ள 'மவுண்ட் வியூ ' வில் தங்கினோம்.

மிகவும் பரப்பரப்பான நகரம். தமிழகத்தின் நுழைவு வாயில் என்பதால் இங்கு பல மொழி பேசுபவர்கள் அதிகம். கர்நாடகவிலுருந்தும் ஆந்த்ராவிலுமிருந்தும் வர, தமிழகத்தின் வட மேற்கு எல்லையாக வேலூர் திகழ்கிறது. இங்கு வேலூர் ஜெயில், சி எம் சி, இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், காவல் துறை பயிற்சி மையம் என்று அதிகார மையம் குவிந்திருப்பதால் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. வாகன விபத்தும் அதிகம். பெங்களூரு மற்றும் சித்தூர் செல்ல நீங்கள் வேலூர் கடந்து தான் செல்லவேண்டு.

நீர் இல்லா ஆறு !
மரம் இல்லா மலை !
மன்னன் இல்லாத கோட்டை!
இதுதான் வேலூரின் சிறப்பு.

இதோடு ' சாமி இல்லா கோவில் ' என்ற சொல்லும் உண்டு. வேலூரின் மையத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரின் சிலை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நகரத்தின் தொடக்கத்தில் உள்ள சத்துவாச்சேரியில் தான் இருந்தது. திப்பு சுல்தான் படையேடுபிளுருந்து மூலவரை காப்பாற்றவே அங்கு உள்ள மக்கள் சிலையை பத்திரப்படுத்தி இருந்தனர். பின்னர் சிலை மீண்டும் கோவிலில் பிரதிழ்டை செயப்பட்டுள்ளது.

அசைவப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்.

நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற ஊர் வேலூர். நவாபுகளின் படையெடுப்பால் இங்கு இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர். வேலூர், ஆம்பூர், ஆற்காடு , வாணியம்பாடி என்று முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம். மிகவும் மரியாதையான மனிதர்கள். இவர்களின் தாக்கத்தால் இந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பிரியாணி ஏக பிரபலம். தமிழ் நாட்டின் எந்த ஒரு இடத்திலாவது இந்த ஊர் பெயர்களில் நிச்சயம் ஒரு பிரியாணிக் கடை இருக்கும். வேலூரில் திரும்பியப் பக்கமெல்லாம் பிரியாணிக் கடைதான்.

மாலை நேரம் தொடங்கிவிட்டால் இங்கு தள்ளு வண்டிகளில் இருந்து கம...கம... innu வாசனை வரும். இங்கு 'சிக்கன் பக்கோடா' வெகு பேமஸ். நகரம் முழுவது தள்ளு வண்டிகளில் சிக்கன் பகோடா, பிஷ் பகோடா, இரா பகோடா யன்று சுடச் சுட பொறித்து தருவார்கள். அந்த மனமும் சுவையும் மொரு... மொருப்பும் வேறு எங்கும் கிடைக்காது. காரணம், அவர்கள் பயன்படுத்தும் மசாலா. வெற்றியின் ரகசியம் அந்த மசாலாவிலும் அதை அவர்கள் பக்குவமாக செய்யிம் விதத்திலும் தான் இருக்கிறது. கூடவே சேமியா வும் தருவார்கள். நம்ம வூர் இடியப்பம் போல் இருக்கும். ரெண்டும் மேளத்தின் , ரெண்டுப் பக்கம் போல நீங்கள் தனி ஆவர்த்தனமே செய்யலாம்.

அம்மா பிரியாணி. வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கிறது. அடாடா...! இலையை மடிக்க மனம் இருக்காது. அப்படி ஒரு ருசி. கடந்த பதினேழு வருடங்களாக பிரியாணி தயாரிப்பில் இருக்கிறார்கள். தரம் மாறாத ருசி, யதர்க்காகவும் தயாரிப்புப் பொருட்களில் கை வைப்பதில்லை. விலை ஏறினாலும் அனைத்துப் பொருட்களையும் குறைக்காமல் போடுகிறார்கள். ( எல்லாம் சொல்லக் கேள்வி) நீங்கள் மதியம் மூன்று மணிக்கு சென்றால் உங்களக்கு வெறும் பிரியாணிதான் கிடைக்கும். அதோடு மாலை ஆறு மணிக்கு மீண்டும் பிரியாணி திருவிழ்தான். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டக் கூடிய தன்மையுடன் இருந்தது அம்மா பிரியாணி.

என் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...

ஸ்ரீ புறம், வேலூரின் கல்வி நிலையங்கள், அம்ரிதிக் காடு, தொரப்படி சிறைச் சாலை, சி எம் சி பற்றி மற்றொரூ பதிவில் சொல்கிறேன்.

-தோழன் மபா

3 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

:-)

பதிவையே பயங்கரமா மணக்க வச்சுட்டீங்க. பிரியாணி வாசம்

ராஜ நடராஜன் சொன்னது…

சுரேஷ் கண்ணன் பிரியாணி செஞ்சாரா,உங்க வீட்டுப் பிரியாணியும் நல்லாயிருக்குமுன்னு சொன்னதால வந்தேன்.

(சொல் சரிபார்ப்பு எடுத்து விடுங்களேன்.)

KARTHIK சொன்னது…

அம்மா பிரியாணி!
மைண்டல வெச்சுக்குறேன்.
அடுத்ததடவ வேலூர் போயிட்டு வந்து சொல்லுறேங்க.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...