ஞாயிறு, ஜனவரி 03, 2010

செம்மொழி என்றால் என்ன ? கவிக்கோ அப்துல் ரஹ்மான்


'உலகின் 8-வது அதிசயமாக தமிழ் மொழி பார்க்கப்படுகிறது' - கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

சென்னை 33வது புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உரை அரங்கத்தில் 'செம்மொழி சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

செம்மொழி என்றால் என்ன என்று பெரும்பாலனவர்களுக்கு தெரியாத சூழல் உள்ளது. ஒரு மொழி தனக்குரிய அனைத்து சிறப்புகளையும் பெற்று, அதே சமயத்தில் குறை எதுவும் இல்லாமல், அதில் செம்மை தன்மை நிறைந்திருப்பின் அந்த மொழி செம்மொழி என அங்கீகரிக்கப் படுகிறது.

தமிழ் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதால், 8-வது அதிசயமாக பார்க்கப் படுகிறது.

கணியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வரியின் மூலம் தமிழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே உலக அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. அதற்கு பிறகே இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல்வேறு கால கட்டங்களில், அந்நிய படையெடுப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சமாளித்து தாங்கி நிற்கிறது தமிழ். கலை இலக்கிய தனித்தன்மை, மொழி கோட்பாடு, தொன்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் வேறு எந்த மொழியிலும் இல்லாத கலைச் சொற்கள் இருப்பது தமிழில் மட்டும் தான்.

சங்க இலக்கியம் முதல் இன்று வரை தமிழில் வந்துள்ள இலக்கியங்கள் மூலம் தமிழின் சிறப்புகளை அறிவதோடு, தமிழ் உயர்தனிச் சொம்மொழி என்பதை மக்கள் பெருமிதத்துடன் உணர வேண்டும். இதுவே இப்போதைய தேவை' என்றார் அப்துல் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை:

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...