வியாழன், பிப்ரவரி 25, 2010

ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


கலைவாணி.
ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


சென்னை பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ் எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு. சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98 என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள் 'அப்படிப்பட்ட பெண்கள் (?)' என்று.

அவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள். சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்படி ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.

கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


ஒரு பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள்? என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.


இக் கதையில் (கதையல்ல நிஜம்!) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம் பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர் பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும் தெரிந்துக் கொள்கிறோம்.

இப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒன்றுமே அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.

'மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு 'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு "இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட் பண்ணு" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.

பசிமயக்கம் காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத் தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற....


என்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்

'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.

'வடபழனி அஞ்சு ரூபாம்மா.'

'எங்கிட்ட வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும் வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'

கண்டக்டரின் முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார். வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

'என்னை அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று இவன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான் ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.

'ஆண்களின் உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'

இப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.

இந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்?

பாலியல் தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம் செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்?.
*********** ******************* **********

பக்கம் 168
விலை : ரூ 80/-
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

most of them are very pitiable.... they r good and lets try to help them to settle in life in good manner

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல புத்தக மதிப்புரை.கருத்துக்க்ள் தெளிவாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்.புத்தக அறிமுகத்திற்க்கு நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

pathivu arumai

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி !

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சில மாதங்களுக்கு முன் கிழக்கில் ஆர்டர் செய்து இந்த நூலினை வாசித்தேன். ஒரு மேம்போக்கான சுய விளக்கத்தை மட்டுமே என்னால் உணர முடிந்தது. சுவாரசியமான எழுத்து நடை கொண்ட புத்தகம்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...