புதன், மார்ச் 16, 2016

யோனியில் உறைந்திருக்கும் சாதி?.





                ந்த கொடூர கொலையை வாட்ஸ்ப்பில் பார்க்கும் போது மனம் பதபதைக்கிறது. மனித நிலை கடந்த மிருக நிலையில் வீசும் அரிவாள், சதைகளை பிளந்து அந்த இளம் ஜோடியின் வாழ்க்கையை வெட்டி வீழ்த்துகிறது.
கொலையாளிகளின் வெறி கூச்சல், கணவனின் மரண ஓலம், சுற்றி ஆயிரம் பேர் இருந்தும் உதவிக்கு வராத மனிதர்கள் என்று உயிரற்ற கணவனின் உடலின் அருகில் அவள் சிலைபோல் நிற்கிறாள். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அன் நிகழ்வு அவளிடமிருந்து அகலுமா...?. அதை நினைக்கும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பாளே அந்த அப்பாவி பெண். அவளுக்கு இ(அ)ந்த சமூகம் என்ன செய்துவிட போகிறது?.

காதலிப்பது குற்றம் என்றால் இந்த உலகத்தில் எல்லோருமே குற்றவாளிகள்தான். மகள் காதலிப்பது பிடிக்கவில்லையா...?. ஊர் பொது பஞ்சாயத்தில் வைத்து பேசி முடிவெடுங்கள். இல்லை இரு குடும்ப பெரியவர்கள் பேசி முடிவெடுங்கள். இரு தரப்பும் காவல் துறை முன்னணியில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். சம்மந்தப்பட்டவர்கள் தங்களது ஆசை மகனோ/மகளோ என்கின்ற போது இத்தகைய அணுகுமுறைகள் நிச்சயம் உயிர் பலிகளை தடுக்கும்.

"இதெல்லாம் நடக்கிற காரியமா...?" என்று நீங்கள் கேட்கலாம்?. முன்னேறிய நாகரிக சாதி என்றால் இதைக் கேட்கும், முட்டாப் பய சாதி என்றால், சாதிக்காக முண்டா தட்டும்.
கற்பனையில் இருக்கும் 'சாதி' என்ற பீ பெருமைக்காக மண் தின்னும் இந்த மடையர்களை எப்படி நல்வழிப் படுத்துவது?.

கொலைக்கு பின்னர் கோர்ட்டு கேஸு என்று அலையும், அந்த கொலைகாரக் குடும்பத்தை, சொந்த சாதியினரே வெறுத்தொதுக்குவார்கள் என்பது நாம் அறியாத உண்மை.

சங்கர்-கவுசல்யா திருமண கோலத்தில்


காதல் போய், காதல் கணவன் உயிர் போய், மகள் காலம் முழுவதும் கண்ணீர் சிந்துவதற்கு, கொளரவம் பார்க்காமல் பேசி முடிவெடுப்பது நல்லதுதானே....?. அதைவிடுத்து காதல் பிரச்சனைக்கு காதலனை அல்லது காதலியை கொல்வது ஒன்றுதான் தீர்வு என்று நினைப்பது எத்தனை கொடூரம்?.



மகளின் காதலை அழித்து, அவளின் காதலனை கொடூரமாய் கொன்று, குடும்பமே கொலை பழி சுமந்து, வாழ்க்கை முழுவதும் துயரம் தரித்து... அப்படி என்ன வாழ்க்கையை....., அந்த பெண்ணுக்கு அந்த பெற்றோர்கள் தந்துவிடப் போகிறார்கள்?

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...