வியாழன், செப்டம்பர் 10, 2009

இலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.





வரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கொடுமை சென்னை பத்திரிகை உலகில் நடந்துள்ளது. இலங்கை அரசு, இந்திய அரசின் துணை கொண்டு இலங்கையின் பூர்விக இன மக்களான ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அவர்களை பூண்டோடு அழித்து வருகிறது. அது தொடர்பான செய்தியை தமிழத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை புலிகளுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழ் பத்திரிகையாளர்களை பணத்தால் கவனித்துள்ளது.


ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் நமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.



தமிழ் நாளிதழ்களுக்கு இலங்கை அரசு பணம் கொடுத்து செய்திகளை போடுகிறது என்பதை 18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னேன்.
அன்று நான் எழுதியது...


'கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவருகிறது தினமலர். இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் துணைக்கொண்டு கட்டுரைகளை எழுதிவருகிறது. என்னமோ இலங்கை அரசு தமிழர்கள்மேல் ராணுவத்தை ஏவ வில்லை என்பதுபோலும், விடுதலை புலிகள் தான் இலங்கை அரசின் மீது போர்த் தொடுக்கிறார்கள் என்பதுபோல் செய்திகளை பரப்பி வருகிறது தினமலர்.கருணாவின் தூதுவர்கள், இலங்கை அரசின் நிதி உதவியோடு அந்தச் செய்திகளை வெளியீட முன்னணி நாளிதழ்களை தொடர்புக் கொண்டார்கள். ஆனால் எந்த பத்திரிகையும் செய்தியை வெளியீட மறுத்துவிட்டனர். ஆனால் தினமலர் நாளிதழ் மட்டுமே வெளியிட்டு தான் யார் என்பதை நிருபித்துள்ளது'


"இலங்கை அரசின் நிதி உதவியோடுதான் தற்போது தினமலர் நடத்தப்படுகிறது என்ற சந்தேகம் நமக்குள் பலமாக எழுகிறது"

18/01/2009 - தமிழன் வீதி

-------------------------------------------------------------------------------------------



புதிய ஜனநாயகத்தில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு...




தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? " எஸ்.ஆர். எம். மாளிகை". அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.


-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பா. ஜ.க., வின் ஜின்னா புத்தி...!







'கடந்த பாரளுமன்றத் தேர்தலில் பா. ஜ.க.வை நான் பெரிதும் நம்பியிருந்தேன் '

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையில், இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி சிங்கள இனவாத அரசுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்துவந்தது. இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுடன் இனைந்து காங்கிரஸ் அரசு பகிரங்கமாக ஈடுப்பட்டு வந்தது. இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தன.





இந்த நயவஞ்சக காங்கிரஸ் அரசை வீழ்த்த பா.ஜ.க., வினால்தான் முடியும் என்று நினைத்து இருத்தேன். காங்கிரஸ் பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்க, பா.ஜ.க.,வினர் டப்பா தட்டிக்கொண்டு இருந்தனர்.





மொக்க பிரச்சார உத்திகள்.



மொக்க பிரச்சார உத்திகள், பிரதமர் யார் என்று அறிவிக்காதது, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்காதது, பலம் இல்லா கூட்டணி, வியுகம் அமைத்து பிரச்சாரம் செய்யாத்து என்று இவர்கள் தோற்க ஆயிரம் காரணம்.
மற்ற கட்சியினர் காசை தண்ணிராய் செலவு செய்ய... இவர்கள் இறுக்கி கட்டிய முடிச்சை அவிழ்க்காதது. எப்படி தெரியுமென்று கேட்கலாம்? தேர்தல் விளம்பரம் தொடர்பாக தென் சென்னையில் போட்டியிட்ட இல. கணேசன் அவர்களிடம் பேச சென்றேன், அவரது அண்ணன்தான் பேசினார். பிசாத்து ருபாய்க்கு பேரம் பேசி, கடைசி வரை விளம்பரம் தரவேயில்லை. நாங்கள் புலம்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம்.





காங்கிரசை தாலையில் தட்டி மூலையில் குந்தவைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த என் போன்றவர்களுக்கு, காங்கிரசின் அரிதிப் பெரும்பாண்மை அதிர்ச்சியை அளித்தது. கார்கில் போர், பொக்கரான் அணுகுண்டு வெடிப்பு என்று 5 வருடம் இந்தியாவை வழி நடத்திச் சென்றவர்கள், தடுமாறிப்போனார்கள். தமிழர்களின் வாழ்வில் விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

" நான் முதலில் இந்தியன். பிறகுதான் இஸ்லாமியன்" - ஜின்னா.



இந்திய,பாகிஸ்தான் பிரிவினை குறித்தும் பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரிய அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதன் முதல் சுற்றில் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது புயலின் மையம் அத்வனியை நோக்கித் திரும்பியிருக்கிறது.
ஜின்னா இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை பிரித்தது நல்லதா, கெட்டதா என்று இப்பொது நாம் ஆராயத் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு அமைவதை ஜின்னா எதிர்த்துதான் வந்துள்ளார்.





ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் ஜின்னா. காங்கிரசின் மூத்த தலைவர்களிள் ஒருவராக உருவெடுத்தார் அவர். " நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் இஸ்லாமியன்" எனக் கருதினார்.
கோகலேயின் ஆலொசனைப்படிதான் ஜின்னா முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லீம் லீகைக் காப்பாற்றி காங்கிரஸோடு நல்லுரவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஜின்னாவின் நோக்கம்.
ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத் திட்டத்தை அவர் ஏளனம் செய்தார்.




இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லீம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.





இப்படி தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்த ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத்தொடங்கினார். அவருக்கு அதரவுப் பெறுகி பாகிஸ்தான் பிரிந்தது தனிக் கதை.





பா. ஜ. க., வின் சின்ன புத்தி!





இப்படி உள்ளதை உள்ளப்படி எழுதியிருக்கிறார் ஜஸ்வந்த் சிங். இதில் கதையின் நாயகனை புகழ்ந்தும் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸின் கிளையாகச் செயல்படும் பா.ஜ.க.,விற்கு இது பெரும் தலைவலியாக இருக்க... சற்றும் எதிர்பாராமல் ஜஸ்வந்த் சிங்கின் தலையில் கைவைத்து விட்டார்கள். முன்பு ஒரு முறை அத்வானி பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதே போல் ஜின்னாவை புகழ்ந்து பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார். 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று அவர் தப்பியது தனிக் கதை.





இப்படி ஜின்னாவைப் பற்றிப் பேசினால், அவர்களது சின்ன புத்தியால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியாது என்பதுதான் உண்மை.





எது எப்படியோ! பா.ஜ.க வில் இருந்துக் கொண்டு ஜின்னாவைப் பற்றி எழுத தனி துணிச்சல் வேண்டும். அதற்காகவாவது ஜஸ்வந்த் சிங்கை நாம் பாரட்ட வேண்டும்.





இந்தியர்களால் தூற்றப்பட்ட ஜின்னாவின் ஆவி இந்த முறை எத்தனைப் பேரை 'பலி' கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை?

சனி, ஆகஸ்ட் 22, 2009

"என் அன்னைக்கு பிறகு என்னை வளர்த்தது சென்னை"

இன்று சென்னை தினம் 22/08/09



சென்னை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. நான் மாயவரம் அ.வ.அ., கல்லுரியில் இளங்கலை வணிகவியல் முடித்து, 20 நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். 1995 ஜுலையில் நானும், தம்பி வேல்முருகனும் சென்னை வந்தோம். இப்போ அவன் அமெரிக்காவில் ஜாகை. சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'அமெரிக்கன் எம்பஸியத்திற்கு' இருவரும் அடிக்கடி செல்வதுண்டு. வழ வழப்பான தாளில் உலக நாடுகளின் வரலாறும், பல் துறைத் தகவல்களும் புதைந்திருக்கும். வாரக் கடைசியில் புகழ்ப் பெற்ற ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். காலையில் வேலை தேடுவதும், மதியத்தில் அமெரிக்கன் எம்பஸியத்தில் இளைப்பாருவதுமாய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டு இருந்த நாட்கள் அது!

பிறகு பத்திரிகைகளில் பணி புரிய ஆரம்பித்தவுடன், சென்னையின் நீள அகலத்தை அளக்க ஆரம்பித்தேன். சென்னையின் வளர்ச்சியை கடந்த 14 வருடங்களாக அருகில் இருந்து பார்த்து வருகிறென். அதன் வளர்ச்சி நம்மை பிரமிக்கவைக்கிறது.


சென்னையில் எனக்கு பிடித்த... பிடிக்காத பத்து.


சென்னையில் பிடித்த பத்து.


1 எளிமை மாறாத மக்கள்.

2 என்னதான் கார்ப்பொரேட் சிட்டி என்ற முகம் காட்டினாலும் ஆடி மாதத்தில் தெருவுக்குத் தெரு கூழ் ஊத்த மறக்காதது.

3 காசு இல்லை என்றாலும், கவலையே இல்லாமல் காத்து வாங்கலாம்- மெரினாவில்.

4 எப்பொதும் மக்கள் கூட்டத்தில் மயங்கிக் கிடக்கும் தி நகர் ரெங்கனாதன் தெருவும் உஸ்மான் சாலையும்.

5 நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகினாலும், தானும் வளர்ந்து தனது மக்களையும் வளர்த்து விடும் அற்புதம்.

6 மாணவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து லாகவமாய் கம்பியை பிடித்துக் கொண்டு இறங்குவதும், என்னதான் கூட்டம் கூரையை பியித்துக் கொண்டு இருந்தாலும், மேற்கூரையில் தட்டிக்கொண்டு மாணவன் பாடும் 'கானா' அழகு.

7 யாரவது சாலையில் அடிப்பட்டு விட்டால், மனித நேயத்தோடு உடனே உதவி செய்யும் மக்கள்.

8 சென்னையை பாதுகாப்பாக வைத்திருக்க, தனது தூக்கத்தையும் மறந்து காவல் பாணியாற்றும் சென்னை மாநகர காவல் துறையினர்.

9 பழமை மாறாமல் இருக்கும் திருவல்லிக்கேணியும்,சென்னையின் வர்த்தக தலை நகரான பிராட் வேயும் அதன் நெருக்கடியான தெருக்களும்.

10 "இன்னாமே...யெப்டிக் கீற... நல்லாக் க்ரியா?" என்று தமிழின் தனி இலக்கணத்தோடு பேசும் சென்னை தமிழ்.


பிடிக்காத பத்து (அத...எத்து)


1) சாலை விதிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்கள்.

2) இதைப் போல வண்டிகள் கூட இன்னும் இருக்கிறதா ? என்று நம்மை புருவம் உயர்த்தச் செய்து புகை கக்கி ஊரையே நாறடிக்கும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள்.

3) ஒரு இடத்தில் குப்பையை அள்ளி ஊர் முழுவதும் கொட்டும் அசிங்கமான, நாற்றம் பிடித்த குப்பை வண்டிகள். கூடவே குப்பையை கொளுத்தி காற்றை மாசுப் படச் செய்யும் பொறுப்பில்லாத பக்கத்து வீட்டுக் காரர்கள்.

4 சென்னையில் 'சிங்கிள் டீ' குடிக்கவேண்டும் என்றாலும் மலையாளிகளிடம் தான் கேட்கவேண்டியிருக்கிறது. (டீ நல்லா இருந்தாலாவாவது சகித்துக்கொள்ளலாம்.)

5 கொழ...கொழவென சளியை சாலையில் துப்பி, குழந்தைகளும் இந்த சாலையில் தான் நடக்கிறார்கள் என்பதை மறந்த சொரனையற்ற ஜென்மங்கள்.

6 'டாஸ்மாக் பார்' பார்க்கவே கண்றாவியாய் இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படமால் 'ஈ யோடு ஈ யாய்' அமர்ந்து கடை மூடும் வரை சரக்கடிக்கும் நம்ம சென்னை குடிமகன்கள்.

7 தமிழையும், தமிழர்களையும் பற்றி கவலைப் படாத, . தன் தாய் மொழியாம் தமிழை மறந்து அயல் மொழிக்கு சாமரம் வீசும் சென்னை தமிழர்கள்.

8 சாலை விதிகளுக்கு நாங்கள் அப்பாற் பட்டவர்கள் என்று, ஆட்டோ / பேருந்துகளை தாரு மாராய் இயக்கி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் "சென்னை மா நகர பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

9 சாலையில் நான்கு பேர் ஒர் இடத்தில் நின்று எட்டிப் பார்த்தால் போதும்..., அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாய்' வண்டியை நிறுத்தி எட்டிப் பார்ப்பது. அப்படியும் தகவல் கிடைக்கவிட்டால், அங்கே பராக்குப் பார்த்துக் கொண்டு (அவனுக்கும் ஒன்னும் தெரியாது) நிற்பவனை பிராண்டுவது " என்ன சார்... என்ன ஆச்சி..." என்று. அலுவலகத்திற்கு கால தாமதமாய் சென்றாலும் பரவாயில்லை என்று, தகவல் கிடைத்தப் பிறகுதான் அங்கிருந்து நகர்வது.

10 "இன்னைக்கு நீ தோண்டினால்... நாளை நான் தோண்டுவேன்" என்று கங்கனம் கட்டிக் கொண்டு சென்னை சாலைகளை தோண்டிப் போட்டு பிறகு அதைப்பற்றி கவலைப் படாத... மின்சார வாரியம்/தொலை தொடர்பு துறை,குடி நீர் / வடிகால் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி.

வாழ்க சென்னை...வாழிய...வாழியவே!

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

"தமிழ் விக்கிபீடியாவில் -68வது இடத்தில் தமிழ்



இன்று ஊடங்களும், இனையத் தளங்களும் பெருகி விட்டப் பிறகு தேடுதல் எண்பது மிகுந்த சுக அனுபவமாக மாறிவிட்டது என்றால் அது மிகையன்று.
பத்திரிகை அலுவலகங்களில் ... ஒரு நூலகம் எப்பொதும் இயங்கிக்கொண்டு இருக்கும். அதில், தங்களது படைப்புகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தொகுப்புகள் , இதுநாள் வரையில் வந்த நாளிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காகவே பல லட்சங்களை செலவு செய்வார்கள். ஏதாவது பழைய நாளிதழ் வேண்டும் என்றால் கூட, அது எத்தனை வருடம் ஆகி இருக்கிறதோஅத்தனை வருடத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.


நூலகத்திற்கென்றே மிகப் பெரிய கட்டிடத்தை பராமரித்தார்கள் எக்ஸ்பிரஸ் குழுமத்தினர். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலமையகம், சென்னை மவுண்ட் ரோடில் இயங்கிக் கொண்டு இருந்த பொது, நான் நூலகத்தைப் பார்த்திருக்கின்றேன்.



கிளப் ஹவுஸ்


ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் அங்கு தங்கி இருந்ததால், அதற்கு 'கிளப் ஹவுஸ்' என்ற பெயர். இன்றும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில் கிளப் ஹவுஸ் ரோடு இருக்கிறது. அந்த கிளப் ஹவுஸ்ஸில் தான் எக்ஸ்பிரஸ் குழுமம் இயங்கிக்கொண்டுஇருந்தது. அங்கு உள்ள நீச்சல் குளத்தை நாளிதழ்கள் சேமித்துவைக்கும் கிடங்காக மாற்றி இருந்தார்கள். ஒரு நாள் 80 தாவது வருட தினமணி தேவைப்பட்டதால் அதை எடுக்கச் சென்றேன்.


உள்ளே ஒரே இருட்டு, இரும்பு கிராதிகள் வானுயரத்திற்கு நிறுத்தி இருந்தது. ஒரு 40 வால்ட் குண்டு பல்ப் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது. அந்த இடமே பார்க்க பயம் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது. நீச்சல் குளத்தின் ஆழத்திலிருந்து மர ராக்குகளை கூறை வரை அமைத்து இருந்தனர். பேப்பர் தேடவேண்டும் என்றால், நீச்சல் குளத்தின் கீழே இறங்கித் தான் தேடவேண்டும். அந்தக் கட்டிடத்தின் உச்சி வரை மர ராக் நீண்டு இருக்கும். வரலாற்றின் வாசனையோடு நாளிதழ்கள் மர ராக்குகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும். வரிசை, வரிசையாக மர ராக்குகளை பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். முழுவதும் பேப்பர் வாசனை, அப்போதுதான் நினைத்துகொண்டென், இதை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று!
அந்த காலத்தில் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, வரலாற்று ஆவணங்களை சேமித்து வைத்தார்கள்.


அனால் இன்று அந்த நிலை இல்லை. தினசரிகள் எல்லாம் 'ஸகேன்' செய்யப்பட்டு குறுந்தகடுகளாக மாற்றப் பட்டு சேமிக்கப்படுகிறது. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்...



தமிழ்க் கலைக்களஞ்சியம்.


அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. இனையத்திள் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக 'விக்கிபீடியா' திகழ்கிறது.
விக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு" என்று பெயர். விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளேபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.



68வது இடத்தில் தமிழ்



2001 ம் ஆண்டு விக்கிபீடியா ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டு, பின்னர் பல மொழிகளில் விரிவுப்படுத்தப் பட்டது. இன்று 267 மொழிகளில் விக்கிபீடியா செய்திகளைத் தருகிறது. இதில் 28,97,231 கட்டுரைகளைத் தாங்கி ஆங்கிலம் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு 68-வது இடத்தில் உள்ளது.



தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். 2003 முதல் இலங்கை யழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரைஆண்டுகள் தன்னந்தனியே 2760 கட்டுரைகள் உருவாக்கி உள்ளார், என்ற தகவலைத் தருகிறார் மு. இளங்கோ. (விரிவான செய்திகளுக்குப் பார்க்க...பக்கம் 6, தினமணி கட்டுரை 18/08/09)



நமது கடைமை



விக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஒரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகரிப்பர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள்,மனக்கணக்குகள், தமிழில் அறிவியல் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறைகள், வீரம், வணிகம் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது தமிழர்களாகிய நமது தலையாயக் கடமை.



இது தொடர்பான பயிலரங்கங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.



எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் 'விக்கிபீடியாவில்' தமிழ் கட்டுரைகளை வரைந்து தமிழின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன்.
***************************

புதன், ஆகஸ்ட் 19, 2009

ஒரு ஏப்ரல் மாதத்தில்...! (எனது கவிதை)

ஒரு
ஏப்ரல் மாத
பகல் பொழுதில்
அவளை- மீண்டும்
சந்திக்க நேர்ந்தது,


நடந்து முடிந்துவிட்ட
துயரங்களுக்கு-பின்
எதன்
மீதும் நம்பிக்கை
கொள்வதில்லை,


நூலிழையாய்
தொடர்ந்த... அன்பின்
வெளிப்பாடு...


பிரிவின்-பார்
பட்டதும்,


துன்பங்கள்
தோரண
வாயிலாய் மாறின,


நேருக்கு நேர்
பார்த்ததில்...


விழிகளுக்குள்
வெளிச்சம்
பறவினாலும்...


இதயம்
இறந்துவிட்டப்பின்,
விழிகளும்
குருடுதான்,
செல்லும்
வழிகளும்
கரடுதான்.


-19/04/97 இல் நான் எழுதிய கவிதை. நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் அப்பொது காதல் வயப்பட்டு இருந்தேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

கக்கூசுல உக்காந்து முக்குனா வரும் !



"விடுங்க பாஸ். இவனுங்க எப்போவுமே இப்படித்தான்" இப்படித்தான் நினைக்த் தோன்றுகிறது இந்திய அரசைப் பார்த்து.



உலகிலேயே தன் நாட்டு மக்கள் அயல் நாட்டில் அடி ,உதை பட்டாலும் இல்லை கொலையுன்டாலும் கவலைப் படாத அரசு இருக்கிறது என்றல், அது ! இந்திய அரசுதான்.


முன்னால் ஜனாதிபதியை அமெரிக்க விமான நிறுவனம் அவமானப் படித்தியப்போது இவர்கள் என்ன செய்தார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்? இவனுங்க சும்மா ஒரு (இந்திய ஆட்சியாளர்கள்) மொக்கப் பசங்க. இவர்கள் கல்லாபெட்டி நிரம்பினால் போதும் என்று நினைக்கூடிய சுயநல கிரிமிகள்.


எம் தமிழ் இனம் ;இலங்கை இனவாத அரசால் கூட்டம் கூட்டமாக, கொன்று குவித்தப்போது, அதற்கு வெண் சாமரம் வீசிய கருங்களிகள் தானே இவர்கள்?


இப்போவெல்லாம், நான் இந்தியன் என்ற வுணர்வே வரமாட்டேன்கிறது. சிலசமயம் கக்கூசுல உக்காந்து முக்கிக்கிட்டு இருப்போம் பாருங்க, அதைப் போலத்தான் இருக்கிறது என்னிடம் 'நான் இந்தியன் என்ற உணர்வு'.


ஈழத் தமிழர்களின் முப்பது வருட கனவு சில நாட்க்களிலே, கலைந்தது பாருங்க, அன்று என்னுள் கரைந்தது நான் இந்தியன் என்ற எண்ணம். 'நீங்கள் கேட்கலாம், இந்தியா பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு போக வேண்டியதுதானே' என்று.


நான் ஏன் போக வேண்டு? இது எனது தாய் பூமி. எனது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த தேசம். அவர்களது ஆன்மா இங்குதான் சுற்றி இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்களின் முடிவால் நான் இந்தியாவை ஆதிரிக்க வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள், நடத்துவதெல்லாம் நல்லதாகி விடாது.



இன்று சாருக் கானை அமெரிக்கன் சுருக்கென்று, குத்தியவுடனே கோபம் கொப்பளிக்கிறது வட இந்திய உடகங்களுக்கு. தமிழன் குடும்பம் , குடும்பமாய் செத்தானே, அப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா? ஒரு வட இந்தியன் பாதிக்கப் பட்டவுடன் இப்படி கூச்சல் போடுகின்றீர். இல்லை தமிழன் இந்தியனாகத் தெரியவில்லையா? இல்லை தமிழ்



கடலூர் தமிழன் ஒருவன் , ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப் பட்டப் போது, இந்த வட இந்திய ஊடகங்கள் எங்கே சென்று இருந்தார்கள்? மலேசியாவில் தமிழர்கள் அடிப்பட்டபோது, ஏன் வட இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் பட்டத்திற்கு, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?



இவர்கள் எப்போதும் தனது நட்டு மக்கள் பற்றி கவலைப்பட்டதில்லை, என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.


தங்கள் சொந்த நாட்டு மக்கள் அயல் நாடுகளில் அடி வாங்குவதையும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் அயல் நாடுகளில் கொன்றுக் கூவிப்பதையும் வேடிக்கைப் பார்க்கும் ஒரே அரசு இந்திய அரசுதான்(?)


இதில் எங்கேயிருந்து வரும் இந்தியன் என்ற எண்ணம்.


வாழ்க இந்திய ஜனநாயகம் !



ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

இந்த வாரம்...



இந்த வாரம் உலகில் வலம் வந்த சில சம்பவங்கள்.




பன்றி காய்ச்சல்!


உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய், எல்லோர் வாயிலும் அகப்பட்டுப் போனது. (எழுதுவதால் யாருக்கும் தொற்றிவிடது).


என் நண்பன் கேட்டான் "மச்சான், பன்றிக்கு காய்ச்சல் வந்தால், மனுஷனுக்கு ஏன் ஊசி போடுறாங்க..." நல்ல கேள்வி என்று நினைத்துக்கொண்டேன்.

முன்பு வந்த சீசனில் 'சிக்கின்-குனிய' நோய் உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக இந்த போல் வைரஸ் கிருமிகள் முதலில் தோன்றுவது ஆசியக் கண்டத்தில் தான் என்று மேற்கு நாடுகள் பொய்யுரை பரப்பி வரும். ஆனால் இந்த முறை மெக்சிகோ என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். மெக்சிகோ தென் அமெரிக்கவில் உள்ள ஏழை நாடு என்பதால் இருக்குமோ ? (மெக்சிகோ, உலகப் பந்தில் சரியாக இந்தியாவிற்கு கீழே வருகிறது என்கிறார்களே உண்மையா?)




கே பி கைது. ஒரு நாடகம்!
என்னசொல்லி... மலேசிய அரசு இலங்கைக்கு அனுமதி வழங்கி இருக்கும்?

" நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் தமிழர்கள் இங்கேயும் ஆயுதம் தூக்குவார்கள். அது உங்கள் தேசத்தை துண்டாடும். அதனால் புலிகளின் மீதமுள்ள தலைவர் கே பி யை பிடித்துக் குடுத்தால் போதும். மலேசிய தமிழர்களை அடக்க எங்கள் நாடும் உங்களுக்கு உதவும். இது புத்தர் (?) மேல் ஆணை." என்று அவர்களின் காலில் விழுந்து நக்கி இருப்பார்கள். அதனால் தான் மலேஷியாவில் நடந்த கைதை, தாய்லாந்து என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள் சிங்கள இனவாத அரசு.


உலகில் இதுவரை நடந்த எந்த ஒரு சுதந்திரப் போரும், முடிவில் வெற்றிதான் பெற்றுள்ளது. ஏனன்றால், தனது தாய் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களின் ஆத்மா அந்த வெற்றியை பெற்று தரும்.
ஈழம் வெல்லும்.


சிலைகள் திறப்பு... இரு மனங்களின் இணைப்பு...




திருவள்ளுவர் -சர்வைன்கர் சிலை சிலை திறப்பு, நல்ல அரசுகளின் சிறப்பான செயல்பாடுதான் என்று சொல்லவேண்டு. ஏனன்றால், தமிழ் நாட்டிற்கு நீர் தரவேண்டம் என்று அணையில் விழுந்து செத்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த வகையிலாவது தமிழகத்திற்கும், கன்னடதிருகும் எப்போதும் பிரச்சினை இருந்து வரும். அது ! காவிரி ஆகட்டும் ஓகேநக்கல் ஆக்கட்டும்.

எதாவது ஒரு தகராறு என்றால் உடனே தமிழ் சினிமா ஓடும் தியேட்டரை அடித்து உடைப்பது, நகருக்கு வரும் தமிழ் நாட்டு வண்டிகளை அடித்து நொறுக்குவது. என்று அவர்களின் அலப்பறை நம்மால் தாங்க முடியாது.

நான் கூடசிறு வயதில் பெங்களூரு தமிழ் நாட்டின் ஒரு பகுதி என்றுதான் நினைத்து இருந்தேன்(?) அந்தளவிற்கு நம்ம ஆள், அங்கு இருந்து வேர் ஊன்றி உள்ளான்.


எடியுரப்பா தமிழ் நாட்டிற்கு இடையுராக இருப்பார் என்று தான் நினை த்திருப்போம். நல்ல வேலை அவர் முன்பு இருந்தவர்கள் போல் இல்லை என்று தான் சொல்லவேண்டு. எடியுரப்பவின் முயற்சிக்கு கரம் நீட்டிய கலைஞரையும் வாழ்த்த வேண்டும்.


நல்ல முயற்சி என்றும் நன்மை தரும்.

எனது கவிதை...'வழக்கமான ஒன்டேன்று..."

வழக்கமான ஒன்டேன்று

நீ

நிற்கச் சொன்ன...

இடத்தில் அல்லாமல்,

பிறிதொரு இடத்தில்

நிற்கும் போதுதான்,

உணர்கிறேன்,

காத்திருப்பின் அவசியத்தை.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...