ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

இந்த வாரம்...



இந்த வாரம் உலகில் வலம் வந்த சில சம்பவங்கள்.




பன்றி காய்ச்சல்!


உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய், எல்லோர் வாயிலும் அகப்பட்டுப் போனது. (எழுதுவதால் யாருக்கும் தொற்றிவிடது).


என் நண்பன் கேட்டான் "மச்சான், பன்றிக்கு காய்ச்சல் வந்தால், மனுஷனுக்கு ஏன் ஊசி போடுறாங்க..." நல்ல கேள்வி என்று நினைத்துக்கொண்டேன்.

முன்பு வந்த சீசனில் 'சிக்கின்-குனிய' நோய் உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக இந்த போல் வைரஸ் கிருமிகள் முதலில் தோன்றுவது ஆசியக் கண்டத்தில் தான் என்று மேற்கு நாடுகள் பொய்யுரை பரப்பி வரும். ஆனால் இந்த முறை மெக்சிகோ என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். மெக்சிகோ தென் அமெரிக்கவில் உள்ள ஏழை நாடு என்பதால் இருக்குமோ ? (மெக்சிகோ, உலகப் பந்தில் சரியாக இந்தியாவிற்கு கீழே வருகிறது என்கிறார்களே உண்மையா?)




கே பி கைது. ஒரு நாடகம்!
என்னசொல்லி... மலேசிய அரசு இலங்கைக்கு அனுமதி வழங்கி இருக்கும்?

" நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் தமிழர்கள் இங்கேயும் ஆயுதம் தூக்குவார்கள். அது உங்கள் தேசத்தை துண்டாடும். அதனால் புலிகளின் மீதமுள்ள தலைவர் கே பி யை பிடித்துக் குடுத்தால் போதும். மலேசிய தமிழர்களை அடக்க எங்கள் நாடும் உங்களுக்கு உதவும். இது புத்தர் (?) மேல் ஆணை." என்று அவர்களின் காலில் விழுந்து நக்கி இருப்பார்கள். அதனால் தான் மலேஷியாவில் நடந்த கைதை, தாய்லாந்து என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள் சிங்கள இனவாத அரசு.


உலகில் இதுவரை நடந்த எந்த ஒரு சுதந்திரப் போரும், முடிவில் வெற்றிதான் பெற்றுள்ளது. ஏனன்றால், தனது தாய் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களின் ஆத்மா அந்த வெற்றியை பெற்று தரும்.
ஈழம் வெல்லும்.


சிலைகள் திறப்பு... இரு மனங்களின் இணைப்பு...




திருவள்ளுவர் -சர்வைன்கர் சிலை சிலை திறப்பு, நல்ல அரசுகளின் சிறப்பான செயல்பாடுதான் என்று சொல்லவேண்டு. ஏனன்றால், தமிழ் நாட்டிற்கு நீர் தரவேண்டம் என்று அணையில் விழுந்து செத்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த வகையிலாவது தமிழகத்திற்கும், கன்னடதிருகும் எப்போதும் பிரச்சினை இருந்து வரும். அது ! காவிரி ஆகட்டும் ஓகேநக்கல் ஆக்கட்டும்.

எதாவது ஒரு தகராறு என்றால் உடனே தமிழ் சினிமா ஓடும் தியேட்டரை அடித்து உடைப்பது, நகருக்கு வரும் தமிழ் நாட்டு வண்டிகளை அடித்து நொறுக்குவது. என்று அவர்களின் அலப்பறை நம்மால் தாங்க முடியாது.

நான் கூடசிறு வயதில் பெங்களூரு தமிழ் நாட்டின் ஒரு பகுதி என்றுதான் நினைத்து இருந்தேன்(?) அந்தளவிற்கு நம்ம ஆள், அங்கு இருந்து வேர் ஊன்றி உள்ளான்.


எடியுரப்பா தமிழ் நாட்டிற்கு இடையுராக இருப்பார் என்று தான் நினை த்திருப்போம். நல்ல வேலை அவர் முன்பு இருந்தவர்கள் போல் இல்லை என்று தான் சொல்லவேண்டு. எடியுரப்பவின் முயற்சிக்கு கரம் நீட்டிய கலைஞரையும் வாழ்த்த வேண்டும்.


நல்ல முயற்சி என்றும் நன்மை தரும்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...