செவ்வாய், மார்ச் 22, 2016

கள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை



                    ள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வந்த இலங்கை வவுனியா காந்திகுளத்தைச் சேர்ந்த த.மோகன்தாஸ் (22), வேலை கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா ஆகியன தன்னிடம் இல்லை என தெரிவித்த அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் கள்ளப்படகு மூலம் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்தது தவிர மோகன்தாஸ் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்போ, குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணமோ அவரிடம் இல்லை என போலீஸார் இலங்கை துணை தூதரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

இதையடுத்து, மோகன்தாஸ் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து, இலங்கை அனுப்புவதற்கு முயற்சிகளை இலங்கை துணை தூதரகமும், சென்னை காவல்துறையும் மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக அவருக்கு தாற்காலிகமாக பாஸ்போர்ட் வழங்குதற்கு இலங்கை துணை தூதரகம் சம்மதித்துள்ளது என்றும் ஒரிரு நாள்களில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் அவர் வேப்பேரி காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய நடவடிக்கை ஐயா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...