திங்கள், ஜனவரி 12, 2009

'அப்பா -அம்மா ' விளையாட்டு

இப்போதெல்லாம் கவிதை எழுத நேரம் கிடப்பதில்லை. கல்லூரி காலங்களில் வரைந்த கவிதைகள் இன்றும் மனதில் வந்து போவதுண்டு.


அப்படி ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

'அப்பா -அம்மா ' விளையாட்டு

தலையில்

தட்டித் தட்டிதான்

சொல்லித் தந்தார்கள்.

வலது இடது

குழம்பாமல்

செருப்புப் போட...

டிராயர் நனையாமல்

ஒண்ணுக்குப் போக...

கையை கிழிக்காமல்

பென்சில் சீவ...

ஆனால்

கொஞ்சம் கூட

தப்பாமல்

வந்தது

'அப்பா -அம்மா '

விளையாட்டு !


-தோழன் மபா

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...