சனி, ஜனவரி 31, 2009

'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'

ஆயிற்று ! ஒரு மாதமாகிவிட்டது. தமிழன் வீதியில் பதிந்து... முந்தய பதிவிற்கும் இந்த பதிவிற்கும் ஒரு நீண்ட இடைவெளி. காலையில் 6.20 க்கு வீட்டை விட்டு புறப்பட்டால் இரவு ஒன்பது மணியாகி விடுகிறது வீடு வந்து சேர.

அண்ணா நுற்றாண்டை முன்னிட்டு தினமணி நாளிதழ் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளி கொண்டுவர இருக்கிறது. அதற்கான பணிகள் மற்றும் விளம்பரம் தொடர்பாக ஊர் ஊரக அலையவேண்டி இருக்கிறது. நேரம் இதற்கே செலவிடப் படுவதால், சொந்த வேலைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

இதற்கிடையில் தமிழகத்தில் நிறைய மாறுதல்கள். புரட்சி தமிழன் முத்துகுமாரின் மரணத்திற்கு பிறகு காட்சிகள் நிறையவே மாறி இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கையில்,தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டன பொதுக் கூட்டம், உண்ணா நிலை என்று பல்வேறு போராட்டங்களை அறிவித்தாலும், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. நிச்சயம், இது வரும் பாராளும் மன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இனி காங்கிரசால் கனவில் கூட தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.

இலங்கை தமிழர்க்காக போராடுவதில் நீ பெரியவனா இல்லை நான் பெரியவனா என்று தமிழகத்தில் பல பரீட்சை நடந்துக் கொண்டு இருக்கிறது. இதில் அமைதியாக இருந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் செல்வி ஜெயலலிதா.

ராமதாசின் நியாயமான கேள்விகளுக்கு 'அண்ணன் இப்போ சாக மாட்டேன், திண்ணை இப்போ காலியாகது', என்கிறார் கருணாநிதி. இந்த அறிவிலிகளை என்ன வென்று சொல்வது. எல்லாவற்றிலும் தனது சுய லாபத்தை பார்க்கும் சுயநல அரசியல்வாதிகள்.

ஈழ தமிழருக்கு ஆதரவான போராட்டங்களில் பா. ம. கா., வி. சி., ம.தி.மு.கா., போன்ற கட்சிகள் பல லகரங்களை செலவிட்டுள்ளன. தி. மு. கா., வும் தன் பங்கு க்கு ஒரு பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. இல்லன ஒட்டு போயிடுமே!.

இந்த நிகழ்வுகளில் ப.ஜா.கா., வும் வலை விரித்து காத்து இருக்கிறது.

'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...