செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

ஒரு பகல் நேரத்தில்... கவிதை





!!!!!கவிதை!!!!!!


ஒரு பகல் நேரத்தில்...
நான் எழுதிய இக் கவிதை
தினமணி கதிரில் (22/04/2001)
அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
மேஜையில்
இருந்த
பூச்-ஜாடி
அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...