வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

"நீங்கள் ஓடி ஒளிய மக்கள் கூட்டம் தான் நல்லது..."

##குறும்பன்##

.....................நவீனம்.............

மீதமிருந்த நேரத்தில் தினமணி கதிர் எடிட்டர் சிவகுமார் சாரை பார்க்க சென்றேன், அவர் மீதமிருந்த (?) நேரத்தில் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார். சங்க இலக்கியம் முதற்கொண்டு சாயந்தரம் சங்கதி வரைக்கும் விலாவரியாக பேசக்கூடியவர்.

சங்கீதத்தில் அவர் ஒரு மகா அனுபவஸ்தன், அப்படி ஒரு சங்கீத ஞானம் . அதுவும் பழைய சங்கதியெல்லாம் தனிஅவர்தனமே செய்வார், அதற்கு தினமணி கதிரில், வருடம் தோறும் அவர் தயாரிக்கும் இசை மலரே சாட்சி. அவர் சங்க இலக்கியங்களை திரட்டி 'பொங்குதேர் வாழ்க்கை' என்ற புத்தகத்தை 500 பக்கங்களில் எழுதியுள்ளார். (இதை பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் கூறுகிறேன்)

அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொது 'குறும்பன்' என்றொரு நூலை பற்றி சொன்னேன். எனது மனதை தொட்ட சில நூல்களில் குறும்பனுக்கும் இடமுண்டு. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், எதேட்சையாக என் கையில் கிடைத்தது. மறைந்த நெடுமாறன் மாமா வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அருகில் உள்ள புத்தக குவியலில் கிடந்தது. வழக்கமான புத்தகம் போல் அல்லாமல், அளவிலும், அட்டையிலும் சற்றே பெரியதாக இருந்தது. அதுவே என்னை கையில் எடுக்க தூண்டியது.

அதுவரையில் அப்படி ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை நான் படித்ததில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் அப்புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுஇருந்தனர். மிகவும் வித்தியாசமான 'குறும்பன்' என்னும் சுயசரிதை நவீனத்தை உச்பெஸ்கிஸ்தான் மக்கள் கவிஞர் குல்யாமின் (1903-1966) எழுதிஉள்ளார். அந்த உரையாடல் நிச்சயம் வெகுவாக கவரும் என்று சொல்லிவிடலாம். இதுநாள் வரையில் அந்த புத்தகத்தைப் பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சில் விசாரித்தபோது 'அந்த புத்தகம் தற்போது விற்பனையில் இல்லை என்று சொன்னார்கள். அவ்வப்போது பல கடைகளில் தேடி அலைந்துஇருகிறேன்.

நேற்று சிவகுமாரிடம் அந்த புத்தகத்தைப் பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டு இருக்கும்போதுதான், அவர் சொன்னார், ''அட ! பாவி அந்த புத்தகம் re-print ஆகி வந்திரிட்சிடா '' என்றார்.

வீட்டுக்கு கிளம்ப இருந்த நான், வண்டியை நேராக திருமங்கலம் சிக்னலுக்கு விட்டேன். அங்குதான் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் கண்காட்சி. நடத்தி வருகின்றனர். இரவு ஒன்பது இருக்கும், வெளிச்சத்தின் வூடே குறும்பனை தேடினேன், யாரிடம்மும் கேட்கவில்லை. நாமே கண்டுபிடிப்போம் என்று. சரியாக மூன்றாவது சுற்றில் முதல் அடிக்கில் இருந்தான் குறும்பன். சரியான கள்ளன்!

சற்றே கைகள் நடுங்க (பிரமையா?) குறும்பனை புரட்டினேன். நல்ல அச்சில் மிக நேர்த்தியாக வந்திருக்கிறது குறும்பன்.

குறும்பனைப் பற்றி சில வரிகள்...

"தப்பி ஓடி ஒழிய வேண்டுமானால் ஆள் கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவுமில்லை. சந்தை திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவது போல எந்தக் காட்டிலும் முடியாது" - இவ்வாறு கூறுகிறான் நமது நூலின் கதாநாயகன் குறும்பன். சமயோசித சாமர்த்யமும் உள்ள குறும்பன் - சின்னச்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்ரி மங்களுக்கு பிறகு அவன் தலைதெறிக்க ஓடி தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விழயத்தில் அனுபவசாலிதான்!

இந்த குறும்புகார பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளை பருவத்தை நினைவு கூறுகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உச்பெஸ்கிஸ்தான் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது.

தமிழாக்கம் : பூ. சோமசுந்தரம்.

பக்கம் 287

விலை Rs.125/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

1 கருத்து:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

நல்லதொரு அறிமுகம் ம.பா.

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...