வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

வலைப் பதிவாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் வருமா?

(நீங்கள் எதை திறந்து வைத்தாலும் முகத்தை மூடிக் கொள்ளுங்கள்)



மெக்சிகோவில் தோன்றி உலகமுழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது பன்றிக் காய்ச்சல் நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மிக எளிதாக தாக்குகிறதாம்.






தற்காத்துக் கொள்ள சில வழி நமக்கு.






  1. சத்தான உணவுகளையே உண்ணவேண்டும்



  2. பழம், காய்கறிகளை உணவில் அதிகம் பயன் படுத்த வேண்டும்



  3. காலையில் நடைப் பயிற்சி செய்யவேண்டும்



  4. இரவில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது. நம்ம மக்களெல்லாம் (வலைப் பதிவாளர்கள்) இரவில் அதிக நேரம் கண் விழித்து கணினியில் லொட்டு...லொட்டு என்று தட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்படி அதிக நேரம் கண்விழிபதால், நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. நாம் இப்போது எச்சரிக்கையாக இருப்பது நலம்.



  5. குடி, பீடி கூடாது.



  6. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்



  7. பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளவர்களை அருகில் சென்று தொடுதல்/பேசுதல் கூடாது.



  8. சுத்தமான முக மூடிகளை, வெளியில் செல்லும் பொது பயன்படுத்த வேண்டு.



இப்படி நெறைய ஆலோசனைகள் நாளிதழ்களிலும், டிவி களிலும் தொடர்ந்து வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இதெல்லாம் இரவில் கண் விழிக்கும் நம் போன்ற ஆட்களுக்கு பயமாகத்தான் இருக்கும். அதனால் தோழர்களே வலை பதிவினை பகலிலேயே முடித்துவிட்டு, இரவில் நிம்மதியாக தூங்குங்கள்.

























கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...