ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

தமிழ் மணம் அபிமானிகளுக்கு..... நன்றி!




தமிழ் மணம் இந்த வார நட்சத்திர அறிமுகமாக அறிவித்து ஒரு வாரமாகிவிட்டது.  சரியாக சுதந்திர தினதன்று எனது பதிவுகள் தொடங்கியது எனது அதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஒருவாரமும் அந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேனா என்று தெரியவில்லை?.  

நான் எழுதிய சில பதிவுகளில்  எனக்கு திருப்திதந்த பதிவுகள் எது என்றால்  கீழே இருக்கும் இந்த பதிவுகளைத்தான் சொல்லவேண்டும்.
2 உங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களும் ரொம்ப நாளாக எனக்குள் உருத்திக்கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து 'டாஸ்மாக்'கையும்,  தமிழில் பெயர் எழுதும்போது 'ஆங்கிலத்தில் இன்ஷியலை' எழுதுவதையும் நாம் ஒழித்தாகவேண்டும். . இந்த செய்தி ஒரு சதவீதமாவது மக்களுக்கு சென்றிருந்தாலே போதும்,  எனது பதிவுக்கு வெற்றிதான். 

இந்த இரண்டு பதிவுக்கும் நிறைய பின்னோட்டங்கள் வந்திருக்கின்றன. நிறைய நண்பர்கள் முக நூல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அவர்களுக்கு எனது  நன்றி!

'தொல்லைத் தரும் தில்லை தீட்சதர்கள்' 'சுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சியாகிறது டிஸ்கவரி சேனல். 'வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து!? போன்ற பதிவுகள் பதிவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
தமிழ்மணம் வாயிலாக எனது பதிவை வாசித்த உலகளாவிய  தமிழ் மணம் அபிமானிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றிகள். ..
தமிழ் மணம் இணைய தளத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டு இருக்கும் தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றி!

 தொடர்ந்து எழுத  எனக்கு உதவிபுரிந்த எனது சகதர்மபத்தினி கிரிஜா, எனது மகள் இரக்சிதா, மகன் சபரிஷ் பாபு   ஆகியோருக்கும் நன்றிகள் பல....

தமிழ் மணத்தில்  எனது நட்சத்திர பதிவுகள் ஞாயிறு இரவா அல்லது திங்கள் இரவா எப்போது  முடியும், என்பது சரியாகத் தெரியாததால் உங்களுக்கு முன்கூட்டியே நன்றி உரைக்கின்றேன்.

இது ஒரு புதுமையான அனுபவம்!.

தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்நோக்குகின்றேன்.

வணக்கத்துடன்
-தோழன் மபா.

























கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...