திங்கள், ஆகஸ்ட் 22, 2011

முன்பு போலவே...


மழை பெய்யும்-இந்த
இரவில்
வானம் இருண்டு
குளிருடன் கிடக்கிறது.

மின்னல் வெட்டும்
அகால வேளையில்
உணர்வுகள்
ஒற்றையடிப் பாதையில்
வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

ஊதல் காற்றின்
தாலாட்டில் -இருவர்
உடலும் சிலிர்த்து
உலகின்
மறு கூட்டலுக்கு
தயாரானது,

அசைந்தெரியும்
வெளிச்சத்தில்
முகங்களும் கைகளும்
உயிர்களுக்குள்
துழாவின...

அடித்து பெய்த
மழையில்
படுக்கை;
உணர்வுகளுக்குள்
அமிழ்ந்தே கிடந்தது.

எதன் பொருட்டும்
இருந்திராத
முன்மாதிரியில்


மீண்டும் - ஓர்
இரவு
செப்பனிடப்படாமல்


முன்பு போலவே... 

கலைந்தே கிடந்தது. 

-தோழன் மபா.













மீள் பதிவு

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கவிதை நன்றாகவுள்ளது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

மிக்க நன்றி!
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...